Wednesday, July 14, 2010

நெஞ்சில் தைக்குமே முள்.

வெண்தாழிசை

கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.

[1. இது ஒரு மூன்றடிப்பாடல்.

முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள்.

4 comments:

  1. முள்ளில் வலி அதிகம். கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. ஆஹா..சும்மா நச்னு இருக்கு.

    ReplyDelete
  3. வில்லியும்,சாத்தனும்,
    அடித்த தாக்கத்தில்,கொஞ்சம்
    தள்ளி, தள்ளாடி நின்ற மரபினித்
    துள்ளிக் குதித்து ஆடுமே,
    வலைப்பூவில் வந்துதித்த,
    உமையின் கைப் படும் கால்!!!

    ReplyDelete
  4. நன்றி திரு.குமார்.

    ReplyDelete