ஆண் பிரசவித்த
பெண் இவள்.
ஆண்டாண்டு காலமாய்
இவளின் ஆளுமைக்கு
அஸ்த்திவாரமிட்டார்
ஆழமாய்...
ஒவ்வொரு கல்லாய் வைத்து
கொஞ்சம் கொஞ்சமாய்
முன்னேறி
நிமிர்ந்து நிக்க வைத்தார்
கண்டார் கண்படும்
கொள்ளை அழகாய்...
பிறகு
"கட்டிக்கொடுத்துவிட்டார்"
எங்களுக்கு...
எங்கள்
குடும்ப விஷயம்
வெளி கேட்காமலும்
குளிரும் மழையும்
உள் தெரியாமலும்
எங்களை
ஒன்றாக்கி
அணைத்துச் செல்கிறாள்
இவள்
இன்று
எங்கள் கொண்டாட்டங்கள்
துயரங்கள்
எல்லாம்
இவள் மடியில்
எங்கள் பரம்பரைகள்
இவள்
காலடியில்...
No comments:
New comments are not allowed.