Saturday, November 18, 2006


பள்ளிப் பருவம்

சின்னச் சின்னக் கைகளில்
சிறுமைத் தனம் இல்லையே
வண்ண வண்ணக் கண்களில்
வன்மை என்றும் இல்லையே
பஞ்சுப் போன்ற நெஞ்சிலே
பகைமை தெரிவ தில்லையே
பள்ளிக் கூட நாட்களில்
பார்க்கும் யாவும் நன்மையே...

No comments:

Post a Comment