சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Saturday, October 27, 2018
கருப்பும் வெள்ளையும்...
கருப்பும் வெள்ளையுமாய்
மனிதர்கள்...
சில முகங்கள் சிரிப்புடன்..
சில முகங்கள் வெறுப்புடன்..
கருப்பும் வெள்ளையுமாய்
வாழ்க்கை..
சில நேரம் இனிமைகள்
சில நேரம் இயலாமைகள்
கருப்பும் வெள்ளையும்
எதிரானவையல்ல...
இயல்பானவை...
உணர்ந்தால் வாழ்க்கை
வண்ணக் கலவை...
தொலைந்து போனவை
படிக்கப்படாத புத்தகங்கள்
மிதிக்கப்படாத புல்வெளி
கிழிக்கப்படாத காகிதங்கள்
கிறுக்கப்படாத சுவர்கள்
உதைக்கப்படாத பந்து
உணரப்படாத இனிமைகள்
மனிதர்களே!!
எங்கே தொலைத்தீர்கள்
குழந்தைகளை....
‹
›
Home
View web version