சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Thursday, March 31, 2022
இனியவைகூறல்
வேலினை ஒத்த கண்கள்
வில்லினை ஒத்த நெற்றி
தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும்
தாமரை நிறத்தால் ஒக்கும்
தோளிரண்டு மூங்கில் என்றும்
துடியிடை மின்னல் போலும்
ஆயிழை தன்னைக் கண்டார்
யாரவள் மனத்தைக் கண்டார்???
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)