சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Tuesday, June 04, 2024
கீதாஞ்சலி 7
கீதாஞ்சலி 6
கீதாஞ்சலி 5
இறவனின் சிந்தனையில்
சிறிது நேரம்
தியானிக்க வேண்டும்..
லௌகீக விஷயங்களை
பிறகு சிந்திக்கலாம்.
இறைவா
உன்னை
நான் தியானிக்க வேண்டும்…
உன்னைச் சிந்திக்காத
நிமிடங்கள்
என் நெஞ்சில்
அமைதியின்றிப் போகிறது.
நான் துன்பக்கடலில்
சிக்கித் தவிக்கிறேன்…
இறைவா
இதுவே தருணம்
இந்த அமைதியான
நேரத்தில்
உன்னை தியானிக்க
வேண்டும்
Wednesday, April 10, 2024
கீதாஞ்சலி 4
இறைவா
நீ எங்கும் நிறைந்திருப்பவன்
எனவே
நீ வாழும்
இவ்வுடலை
மிகவும் பரிசுத்தமாக
வைத்திருக்க முயல்கிறேன்…
பகுத்தறிவை எனக்குள்
விதைத்தவன் நீ
எனவே
எனது சிந்தனையிலிருந்து
பொய்களை
விலக்கிடுவேன்…
எனது உள்ளத்தில்
நீ உறைந்திருக்கிறாய்
எனவே
எனது உள்ளத்திலிருந்து
தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி
அன்பை வெளிப்படுத்த முற்படுவேன்
எனது
செயல்களுக்கெல்லாம்
வலிமையை நீயே தருகிறாய்
எனவே
எனது செயல்களின் மூலமே
உன்னை வெளிப்படுத்த முயல்கிறேன்
Sunday, April 07, 2024
கீதாஞ்சலி 3
இறைவா!
அற்புதமான
உனது இசையை
நீ
எப்படி இசைக்கிறாய்..
நான் அமைதியோடு
ஆச்சரியத்தில்
மூழ்கிபோகிறேன்..
உனது இசையின்
ஒளி
இவ் உலகையே
வெளிச்சமாக்குகிறதே!
உனது இசை
வானவெளியெங்கும்
பரவியிருக்கிறதே!
உனது
இசையின் பெருவெள்ளம்
கடினமான
பாறைகளையும்
உடைத்து
பெருகுகிறதே!
உனது இசையோடு
இசைக்க
நானும் எண்ணுகிறேன்
ஆனால்
வார்த்தையின்றி
தவிக்கிறேன்.
எனது
வார்த்தைகள்
கவிதையாய்
பரிணமிக்க முடிவதில்லை.
அதனால்
பரிதவிக்கின்றேன்
இறைவா
உனது
இசையின்
முடிவற்ற வலைக்குள்ளே
என் இதயம்
சிக்குண்டுவிட்டதே!
தாகூர்
இயற்கை வழியாக
இறைவனைப் பார்க்கிறார்.
இயற்கையின்
ஒவ்வொரு அழகும்
இறைவனை காட்டுவதல்லவா!
அதனால் தான்
பாரதியும்
காக்கை சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரிய நிறம்
தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும்
மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம்
தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில்
எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா
நந்தலாலா
தீக்குள் விரலை
வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம்
தோன்றுதடா நந்தலாலா
என்கிறார் போலும்.
தொடர்வோம்..
Friday, April 05, 2024
கீதாஞ்சலி 2
உன்னைப் பாட
என்னைப் பணிக்கும் பொழுது
எனது நெஞ்சம்
பெருமையால்
அடைத்துக் கொள்கிறதே!
உனது திருமுகத்தை
கண்டதும் எனது
கண்ணில் நீர்
பெருக்கெடுக்கிறதே!
எனது வாழ்வின்
கஷ்ட நட்டங்கள்
ஒன்றாகி
இனிமையான பாடலாக
வெளிவருகிறதே!
மகிழ்ச்சில் திளைக்கும் பறவை
கடலைத் தாண்டி
உல்லாசமாகப் பறப்பதைப் போல்
உனதன்பால் என் சிந்தனை
சிறகடிகிறதே!
உன் முன்
ஒரு கவிஞனாகவே
நான் நிற்கிறேன்
எனது கவிதையில்
நீ மகிழ்வாய்
என்று எனக்குத் தெரியும்
எனது இசையின்
மெல்லிய அலைகளின்
ஸ்பரிசத்தால்
உன்னைத் தொட்டு
இன்பமடைகிறேன்…
இறைவா
அந்த இன்ப மயக்கத்தில்
என்னை மறந்து
உன்னை
‘நண்பனே’
என்றழைகிறேனே!
நீ
இறைவனல்லவா!
அதனால் தான் பாரதியும்
பரசிவ வெள்ளம் என்ற பாட்டில்
"எண்ணமிட்டாலே போதும்
எண்ணுவதே இவ் இன்பத்
தண் அமுதை உள்ளேஎங்கும் நிறைந்திருந்த ஈச
என்று பாடுகிறாரோ!
கீதாஞ்சலி 1
கீதாஞ்சலி
தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.
1.
இந்த முடிவற்ற பிறவியில்
என்னை
பிணித்திருக்கிறாயே
அதுவே உன் இச்சை போலும்.
மிகவும் பலவீனமான
இப்பாண்டத்தை
அடிக்கடி
வெறுமையாக்கி
மீண்டும் மீண்டும்
புத்துயிரை
நிரப்புகிறாய்
உனது சின்னஞ்சிறு
குழலில்
அமுத கானத்தை
காடு, மலை,
பள்ளத்தாக்கெங்கிலும்
இசைக்கிறாய்
உனது திருக்கரம்
தீண்டியதில்
எனது நெஞ்சம்
இன்பத்தின் எல்லையையே
தாண்டி விடுகிறதே!!!
உனது பெருமையை
பாடத் துவங்குகிறதே!!!
எனது சின்னஞ் சிறிய
கைகள் நிரம்பி வழியும் படி
பல அரிய கொடைகளை
நீ தருகிறாய்..
உனது கருணை
அளப்பரியது..
பல காலங்களாய்
தொடர்வது..
இன்னும்
முடியாமல்
தொடர்ந்து கொண்டே
இருப்பது…
பாரதியும் அதனால் தான்..
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
என்று பாடுகிறார்...
தொடர்வோம்..
Thursday, April 04, 2024
வேண்டுதல்
இறைவா
இம்மலரை
இப்பொழுதே பறித்து
எடுத்துக் கொள்
ஒருவேளை
இம்மலர்
தாழ்ந்து
தூசியில் விழுந்துவிடுமோ
என்று அஞ்சுகிறேன்.
உனது மாலையில்
இம்மலருக்கு
இடமில்லாமல்
போகலாம்
ஆனாலும்
அருளோடு
உனது திருக்கைகளால்
பறித்துக் கொள்வதே
பேரானந்தம்
உணர்வதற்கு
முன்பே,
முழுவதுமாக
அர்ப்பணிக்கும் முன்பே
காலம்
கடந்து விடுமோ!
இறைவா
இந்த மலரில்
வண்ணம் நீங்கி இருக்கலாம்,
மணம் மங்கி இருக்கலாம்
அனாலும்
உனது திருப்பணிக்காக
இப்பொழுதே
இம்மலரை
ஏற்றுக் கொள்ளுங்களேன்.
தனது ஆன்மாவையே மலராக
இறைவனுக்கு அளிக்கும்
தாகூரின் பாடல்
Gitanjali, Rabindranath Tagore
Pluck this little flower and take it,
delay not! I fear lest it droop and
drop into the dust.
It may not find a place in thy garland,
but honour it with a touch of pain
from thy hand and pluck it.
I fear lest the day end
before I am aware,
and the time of offering go by.
Though its colour be not deep and
its smell be faint,
use this flower in thy service and
pluck it while there is time.
Wednesday, April 03, 2024
தேடல்
I have had my invitation to this world’s festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard.
It was my part at this feast to play upon my instrument, and I have done all I could.
Now, I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?
Thursday, September 14, 2023
நிலவே!!!
நிலவே!
உன்னை நாங்கள்
அடைந்து விட்டோம்!
எவ்வளவு ஆனந்தம்
எங்களுக்கு!!
இந்திய மக்களின்
இதயத் துடிப்பல்லவா
நீ!
எங்கள் பாட்டிமார்கள்
உன்னைக் காட்டித்தான்
தம் பிள்ளைகளுக்கு
உணவளித்தார்கள்
எங்கள் தாய்மார்களோ!
நிலா நிலா ஓடிவா!
என்று உன்னைத்
துணைக்கழைத்தார்கள்...
நாங்களோ !
உன்னை அடைந்தே விட்டோம்..
எவ்வளவு ஆனந்தம்
எங்களுக்கு!!
ஒருவேளை
நாளை எம் பிள்ளைகள்
உன்னை
சொந்தம் கொண்டாடுவார்களோ!
நிலவே
உனக்கும்
எங்களுக்குமான
இந்த இடைவெளியை
அன்று
கற்பனையால் கடந்தோம்..
இன்று
அறிவியலால் அளந்தோம்..
நிலவே
உன் அழகு
இன்றும் எங்களை
வசப்படுத்துகிறது..
எங்கள் குழந்தைகளுக்கு
கற்பனையை
கலையை
உன்மூலமாகத்தான்
சொல்லித்தருகிறோம்…
எங்கள் காதலுக்கும்
கவிதைக்கும்
நீயே அடிப்படை…
ஆனாலும்
நிலவே!
சற்று தள்ளி
நில்
மனிதனை
அருகில் வரவிடாதே!
உன் அழகு
கனிமங்களை
அவன்
அள்ளிக் கொள்ளலாம்…
அழகிய பூமியில்
ஆயிரம்
கோடுகள்
கிழித்தவர்கள்
நாங்கள்..
இன்றும்
நடந்துக் கொண்டே
இருக்கிறது
கோடுகளுக்கான
சண்டை …
உன்னையும்
துண்டாடவிடாதே!
வடதுருவம்
தென் துருவம்
என்று
இப்பொழுதே
துண்டாடுகிறார்கள்..
மனிதனை
அண்டவிடாதே!
எங்கள் சந்திராயனைத்
தூங்கவிட்டுவிடு
சந்திரனே!
உன் அழகை
கனிமங்களை
மனித இச்சைக்கு
அளித்துவிடாதே!
ஆசைக்கு
அளவில்லாதவர்கள்
நாங்கள்
நிலவே!
அழகே!
உன்னைத் தொட்ட
எங்கள்
இதயத்தில்
உன் காதல்
என்றும் நிலைத்திருக்கும்…
எங்கள்
ஓவியத்திற்கு
வடிவமாய்
கவிதைக்குப்
பொருளாய்..
காதலுக்கு
துணையாய்
மட்டுமல்ல
எங்கள்
அறிவியல் அறிவிற்கும்
சாட்சியாய்..
என்றும், என்றும்
நீயே…
நிலவே !!!
Sunday, August 13, 2023
அலுவலகம்
இரயில் பயணம்…
25 முதல் 60 வயது வரைத்
தொடரும் நெடிய பயணம்
அறியாத வயதில்
ஆசையாய் ஏறிக்கொள்வோம்
அங்கும் இங்கும் தேடி
நமது இடத்தை கண்டிபிடிப்போம்
நமது இடம்
நமக்குப் பிடித்தது தானா?
இருக்கலாம்
இல்லாமலும் போகலாம்…
நமது உடன் பயணம் செய்பவர்கள்
நமக்கு பிடித்தவர்களா?
இருக்கலாம்,
இல்லாமலும் போகலாம்…
உடன் வருபவர்கள்
ஜாதி, இனம், மொழி என
எப்படி பட்டவரானாலும்
பயணம் ஒன்றுதான்
சிலருக்கு
ஜன்னல் அருகில் இடம்
கிடைக்கும்…
சிலருக்கு
மத்தியில் …
சிலருக்கோ
பர்த் கிடைக்கும்
ஜன்னல் அருகில்
இடம் கிடைத்தாலும்
முனகிக் கொண்டே சிலர்.
சிலர் ஆடிப்பாடி
கொண்டாட்டமாய்…
ஆட்டம் பாட்டம் குறைந்து
தனக்கான உணவை
வைத்துக் கொண்டு
பயணம் தொடரும்..
என் இடம், உன் இடம்
என்ற பாகு பாடு மறைந்து
உணர்வுகள் பரிமாறப்பட்டு
அமைதியாய் சில நேரம்…
சிலருக்கு
வாழ்க்கைத் துணையை
கூட பயணம் கொடுக்கும்
ஒரு சிலருக்கு
ஏசி அறை
கிடைக்கும்…
அனால் அங்கு
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்வதே
இல்லை….
சிலர் பேச வந்தாலும்
சிறிது நேரத்தில்
அமைதியாய் விடுவார்கள்
சிலரோ
முதல் வகுப்பில்
பயணிப்பார்கள்..
இவர்கள்
தனிமையைத்
தானாகத் தேடிக் கொண்டவர்கள்
யாரோடும் பேசமாட்டார்கள்.
தனக்கு வேண்டியதை
உதவியாளரிடம்
கேட்டுப் பெறுவார்கள்.
அவர்கள் அறை என்னவோ
பெரியதுதான்
அனால் உதவிக்குக் கூட
உள்ளே செல்ல முடியாது
60 வயதில்
ஒவ்வொருவராக
இறங்கி கொள்வார்கள்…
பயணிகள்
பிரியாவிடை கொடுப்பார்கள்
தொலைபேசி எண் கூட
பகிர்ந்து கொள்வார்கள்
அனால் பிரிந்ததும்
மிகச்சிலரே தொடர்வார்கள்
இரயில் விட்டு
இறங்கியப் பிறகு
வாழ்க்கை பொதுவானது
முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
என்பதெல்லம்
மறைந்துப் போகும்..
வாழ்க்கை பயணத்தில்
ஜாதி இனம் மொழி
என்று எல்லா
வித்தியாசங்களும் இருக்கும்
ஆனால்
இவற்றைத் தாண்டி
நாம் வளர்ந்து விடுவோம்…
சிலர் அந்த எண்ணத்துடன்
சிறிது தூரம் செல்வார்கள்
அனால் வாழ்க்கை
சில சமையம்
மீண்டும் வருவோம்
சிலரை ஏற்றவோ
அல்லது இறங்குபவர்களை
வாழ்த்தவோ
அப்போது
நமது இடம்
யாரோ ஒருவருடையது…
அது நமது சொந்தமில்லை…
நாமோ அதைப் பற்றி
கவலைப் படுவதில்லை….
Saturday, August 12, 2023
இரகசியம் அழகானது
பூவின் இரகசியம்
தேன்
மெதுவாக
வண்டை அழைக்கும்….
புல்லின் இரகசியம்
பனித்துளி
சூரியனோடு
சொந்தம் கொண்டாடும்…
மேகத்தின் இரகசியம்
மின்னலாய்
வெளிப்படும்
நீள் நதியின்
இரகசியம்
வயல்களில்
விளைச்சலாய்…
காற்றின்
இரகசியம்
தென்றல்
கடற்கரையின்
இரகசியம்
கிளிஞ்சல்கள்…
மண்ணின்
இரகசியம்
மரங்களாய்…
வானோ
வெள்ளி நீர்த் தூறலாய்…
ஒளி இருளோடு
பேசும் இரகசியம்
நட்சத்திரங்கள்…
இருள் ஒளியோடு
பேசும் இரகசியம்
நிழல்களாய்...
குழந்தையின்
இரகசியம்
சிரிப்பு…
பெண்ணின்
இரகசியம்
பார்வை…
ஆணின்
இரகசியம்
அவன் அணைப்பில்….
எழுத்தின்
இரகசியம்
இனிய
கவிதையாய்….
இரகசியம் அழகானது…
Monday, July 24, 2023
நட்பு
தொலைபேசியிலிருந்து
அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்
நட்பு என்ன
பணமா?
பதவியா?
இல்லை
வலைத்தளங்களில் விழும்
“லைக்’ குகளா?
அனைத்துப் பெயர்களையும்
அழித்துவிட்டேன்.
அடடா!
என் கவிதைகளைப்
பகிர
நண்பர்களில்லையே!!!
தனிமையில்
நான் எழுதிய
கவிதைகளைப்
பகிர்ந்துக் கொள்ள
நல்ல
நட்பிற்காக
காத்திருக்கிறேன்…
கிழிசல்
கவிதை புத்தகத்தை
நீ
திருடிக் கொண்டுவிட்டாய்…
இல்லை என்று
சத்தியம் செய்தாய் நீ..
என்னிடம் கேட்டால்
நானே கொடுத்திருப்பேனே!
என் இதயத்தின்
கிழிசலில்
நட்பு
மாட்டிக் கொண்டு
உடைந்து போனது….
கவலை மற
இரத்தக் கசிவு
எனக்குத் தான்…
சிக்கலில்லாமல் இருக்க
சில வழிகள்…
எல்லோரும் சொன்னார்கள்
'நடப்பது நடக்கும்
கவலை மற'…
ஆனால்
நடந்ததை
மறப்பதெப்படி?
'துக்கத்தை
தூர எறிந்தால்
தூக்கம் வரும்'…
என் துக்கங்களை
எங்கே
எறிவது….
நீ கிழித்த
என் இதயத்தை
மூடி மறைத்து விட்டேன்,
மூளைதான்
காட்டிக் கொடுத்துவிட்டது…
ஆஹா
இது என்ன!
என் கவிதை
என்னை ஆற்றுகிறதே!
என் புண்களையெல்லாம்
துடைத்து எறிகிறதே!
காதலிக்கின்றேன்..
கவிதை மலரை
என் இதயத்தில்
மலரவைப்பாயா?
------
Sunday, April 17, 2022
புனித வெள்ளி
Thursday, March 31, 2022
இனியவைகூறல்
வேலினை ஒத்த கண்கள்
வில்லினை ஒத்த நெற்றி
தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும்
தாமரை நிறத்தால் ஒக்கும்
தோளிரண்டு மூங்கில் என்றும்
துடியிடை மின்னல் போலும்
ஆயிழை தன்னைக் கண்டார்
யாரவள் மனத்தைக் கண்டார்???
Thursday, March 10, 2022
பூவா? புயலா? பெண்!!
அன்று!
அவள் கண்களில்
ஒளி இருந்தது
அவளோ!
இருட்டு அறையில்
சிறைப்பட்டிருந்தாள்…
சுதந்திர வெளிச்சம்
சூழ்ந்த போது
அவள் பார்வையோ
பறிக்கப்பட்டது…
பறந்த வெளியில்
பாதை தெரியவில்லை…
அடிமைச் சிறைவிட்டு
அடியெடுத்து வைத்தாலும்
ஆண்களின் பார்வை
அச்சமூட்டியது…
அடிமைக் கூடு
அழிக்கப்பட்டப் போது
அவளது
அழகிய சிறகுகள்
சிதைந்தே இருந்தன…
எதிர்பார்ப்புகளால்
அவள்
இயக்கம்
தடுக்கப்பட்டது…
உலகம்
பட்டுப்பூச்சியை
பருந்தாய்
பறக்கச் சொன்னது…
பறந்தால் மட்டுமே
பெண் எனச் சொன்னது…
இருட்டு அறையிலும்
இயங்கிய கண்கள்
வெளிச்சம் கண்டு
விலகிச் செல்லுமா?
சின்னச் சிறகை
மெல்ல விரித்தே
வானம் அளந்தது.
வண்ணத்துப் பூச்சி..
பறந்த வெளிதான்
பாதை வகுத்து
பயணம் தொடர்ந்தாள்
பெண்
கிழட்டுப்
பார்வைகளை
கிழித்து எறிந்தாள்
புதிய உலகம்
புதிய பார்வை
புதிய பாதை
புதிய பயணம்
புதிதாய் என்றும்
பொலிவாள் பெண்…
பூவும் அல்ல
புயலும் அல்ல
அவள் பெண்…
(சென்னைத் துறைமுக தமிழ்ச்சங்க பெண்கள் தின சிறப்பு இதழுக்காக எழுதியது)
Friday, February 18, 2022
முடிவு உன்கையில்
Saturday, September 11, 2021
பாரதி நினைவில்
Wednesday, June 09, 2021
நலம் தா ஞாயிறே !!!
Sunday, May 30, 2021
கத்தி யின்றி ரத்த மின்றி
Friday, April 02, 2021
காத்திருப்பு
Sunday, March 21, 2021
நதிக்கரை நாகரிகம்
நாணலே மெத்தையாய்
நாணமே போர்வையாய்
நல்லதொரு தூக்கம்
விடியலை வரவேற்கும்
விழிப்பு
உள்ளத்தில் அமைதி
உண்மையால் உறுதி
ஆற்றை குடித்து
காற்றில் மிதந்து
காய் கனி
கடித்து உண்டு
வேட்டை யாடியும்
விளை யாடியும்
சில மணிகள்
இயற்கையைப் படித்து
இதயத்தால் வாழ்க்கை
கள்ளமில்லா காதல்
கடுப்பில்லா மனம்
களைப்பில்லா குணம்
காட்டாற்று வெள்ளம்
கரைப்புரள
காலம் கரைக்கட்டியது
ஏட்டைக் கிழித்தது
எழுத்தாணி
இன்றைய நாகரீகம்
எழுந்தது…
Monday, March 15, 2021
கம்பன் கவித்தேன்
Thursday, May 28, 2020
கொரோனா - கல்விக் கொள்கை
Thursday, May 21, 2020
என் மனமென்னும் மேடையில்
Sunday, May 10, 2020
குறள் தாழிசை
Saturday, May 09, 2020
குறும் பா
Wednesday, May 06, 2020
மல்லிகை பூச்சரம்
உன் சின்னச் சிரிப்பு
Sunday, May 03, 2020
அனுபவம்
Monday, April 27, 2020
தடம்
Thursday, April 09, 2020
கண்ணனாக வா!!
Tuesday, April 07, 2020
யோசனை பூக்கள்
Saturday, April 04, 2020
மின்னற் பொழுதுகள்
Friday, April 03, 2020
ஒற்றை எதிரி
ஒற்றை எதிரி நீ
Tuesday, March 31, 2020
கடல்
நிழல்கள் நகர்ந்த பொழுது...
Sunday, March 29, 2020
சிந்தனைகள் சந்தித்தால்
கொரானா
Sunday, December 29, 2019
2019 --》2020
Saturday, December 14, 2019
நானும் நீயும்
Sunday, November 24, 2019
குறிஞ்சிப் பாட்டு
Tuesday, November 12, 2019
எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!
Sunday, November 10, 2019
வாழ்க்கை உன் கையில்
அறியாமையே அறிவு...
மண்ணின் கவிதைகள்
Saturday, November 09, 2019
நட்பு
Saturday, November 02, 2019
மழையின் பாடல்
வானிலிருந்து வீழும்
வெள்ளி இழை…
இயற்கை தன்
வயல்களையும்,
பள்ளத்தாக்குகளையும்
பொலிவாக்க
என்னை
அழைத்துக் கொள்கிறாள்…
நான்
விடியலின்
தோட்டத்தை அலங்கரிக்க
இறைவனின்
மகுடத்திலிருந்து
உதிர்க்கப்பட்ட
முத்து...
நான்
மேகத்தின் கண்ணீராய்
கொட்டும் போது
மலைகள் சிரிக்கின்றன…
நான்
'தாழ்ந்து'
தொடும் போது
மலர்கள்
'மலர்ச்சி' கொள்கின்றன…
நான்
வீழும் போது
உலகம் மகிழ்ந்து
எழுகிறது….
பூமியும் மேகமும்
காதலர்கள்..
நான்
அவர்கள் அன்பின்
தூதுவன்…
நான்
பலர் தாகத்தைத்
தீர்க்கிறேன்..
பலர் காயங்களை
ஆற்றுகிறேன்…
இடி எனது
வருகையை
உலகுக்குக் கூறும்
வானவில்
எனது
நிறைவைச்
சொல்லும்...
அகிலத்தில்
ஐம்பூதங்களின்
சேர்கையாய்
பிறந்த உயிர்கள் எல்லாம்
மரணத்தின்
விரிந்த சிறகுகள் கொண்டு
மேலெழும்பி
பேரான்மாவை அடைவது போல்...
நானும்
கடற்பரப்பில் இருந்து
தோன்றி
காற்றோடு
மேலெழும்புகிறேன்…
நீரின்றி வறண்டு
எனக்காகக் காத்திருக்கும்
வெளியைக் கண்டால்
காதலோடு கீழிறங்கி
மலர்களையும்
மரங்களையும்
அணைத்துக் கொள்கிறேன்…
நான்
தூறலாய் உங்கள்
ஜன்னல் தொடும் போது
எனது மெல்லிசையை
எல்லோரும் கேட்கிறார்கள்
மென்மையான சிலரே
மனத்தில் கொள்கிறார்கள்…
காற்றின் சூடு
என்னைப் பிரசவித்தது…
நானோ அதை
தணித்து விட்டேன்…
பெண் ஆணிடமிருந்து
பெற்ற பலத்தால்
அவனையே வெல்வது போல்…
நான்
கடலின் பெருமூச்சு
சமவெளியின் சிரிப்பு
வானத்தின் கண்ணீர்…
எனவே
பாசத்தின்
பெருமூச்சோடு,
ஆன்மவின்
மகிழ்ச்சியோடு
எண்ணற்ற
நினைவுகளின்
கண்ணீரோடு
எனது அன்பைப்
பொழிகிறேன்…