சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Sunday, April 17, 2022
புனித வெள்ளி
Thursday, March 31, 2022
இனியவைகூறல்
வேலினை ஒத்த கண்கள்
வில்லினை ஒத்த நெற்றி
தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும்
தாமரை நிறத்தால் ஒக்கும்
தோளிரண்டு மூங்கில் என்றும்
துடியிடை மின்னல் போலும்
ஆயிழை தன்னைக் கண்டார்
யாரவள் மனத்தைக் கண்டார்???
Thursday, March 10, 2022
பூவா? புயலா? பெண்!!
அன்று!
அவள் கண்களில்
ஒளி இருந்தது
அவளோ!
இருட்டு அறையில்
சிறைப்பட்டிருந்தாள்…
சுதந்திர வெளிச்சம்
சூழ்ந்த போது
அவள் பார்வையோ
பறிக்கப்பட்டது…
பறந்த வெளியில்
பாதை தெரியவில்லை…
அடிமைச் சிறைவிட்டு
அடியெடுத்து வைத்தாலும்
ஆண்களின் பார்வை
அச்சமூட்டியது…
அடிமைக் கூடு
அழிக்கப்பட்டப் போது
அவளது
அழகிய சிறகுகள்
சிதைந்தே இருந்தன…
எதிர்பார்ப்புகளால்
அவள்
இயக்கம்
தடுக்கப்பட்டது…
உலகம்
பட்டுப்பூச்சியை
பருந்தாய்
பறக்கச் சொன்னது…
பறந்தால் மட்டுமே
பெண் எனச் சொன்னது…
இருட்டு அறையிலும்
இயங்கிய கண்கள்
வெளிச்சம் கண்டு
விலகிச் செல்லுமா?
சின்னச் சிறகை
மெல்ல விரித்தே
வானம் அளந்தது.
வண்ணத்துப் பூச்சி..
பறந்த வெளிதான்
பாதை வகுத்து
பயணம் தொடர்ந்தாள்
பெண்
கிழட்டுப்
பார்வைகளை
கிழித்து எறிந்தாள்
புதிய உலகம்
புதிய பார்வை
புதிய பாதை
புதிய பயணம்
புதிதாய் என்றும்
பொலிவாள் பெண்…
பூவும் அல்ல
புயலும் அல்ல
அவள் பெண்…
(சென்னைத் துறைமுக தமிழ்ச்சங்க பெண்கள் தின சிறப்பு இதழுக்காக எழுதியது)
Friday, February 18, 2022
முடிவு உன்கையில்
Saturday, September 11, 2021
பாரதி நினைவில்
Wednesday, June 09, 2021
நலம் தா ஞாயிறே !!!
Sunday, May 30, 2021
கத்தி யின்றி ரத்த மின்றி
Friday, April 02, 2021
காத்திருப்பு
Sunday, March 21, 2021
நதிக்கரை நாகரிகம்
நாணலே மெத்தையாய்
நாணமே போர்வையாய்
நல்லதொரு தூக்கம்
விடியலை வரவேற்கும்
விழிப்பு
உள்ளத்தில் அமைதி
உண்மையால் உறுதி
ஆற்றை குடித்து
காற்றில் மிதந்து
காய் கனி
கடித்து உண்டு
வேட்டை யாடியும்
விளை யாடியும்
சில மணிகள்
இயற்கையைப் படித்து
இதயத்தால் வாழ்க்கை
கள்ளமில்லா காதல்
கடுப்பில்லா மனம்
களைப்பில்லா குணம்
காட்டாற்று வெள்ளம்
கரைப்புரள
காலம் கரைக்கட்டியது
ஏட்டைக் கிழித்தது
எழுத்தாணி
இன்றைய நாகரீகம்
எழுந்தது…
Monday, March 15, 2021
கம்பன் கவித்தேன்
Thursday, May 28, 2020
கொரோனா - கல்விக் கொள்கை
Thursday, May 21, 2020
என் மனமென்னும் மேடையில்
Sunday, May 10, 2020
குறள் தாழிசை
Saturday, May 09, 2020
குறும் பா
Wednesday, May 06, 2020
மல்லிகை பூச்சரம்
உன் சின்னச் சிரிப்பு
Sunday, May 03, 2020
அனுபவம்
Monday, April 27, 2020
தடம்
Thursday, April 09, 2020
கண்ணனாக வா!!
Tuesday, April 07, 2020
யோசனை பூக்கள்
Saturday, April 04, 2020
மின்னற் பொழுதுகள்
Friday, April 03, 2020
ஒற்றை எதிரி
ஒற்றை எதிரி நீ
Tuesday, March 31, 2020
கடல்
நிழல்கள் நகர்ந்த பொழுது...
Sunday, March 29, 2020
சிந்தனைகள் சந்தித்தால்
கொரானா
Sunday, December 29, 2019
2019 --》2020
Saturday, December 14, 2019
நானும் நீயும்
Sunday, November 24, 2019
குறிஞ்சிப் பாட்டு
Tuesday, November 12, 2019
எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!
Sunday, November 10, 2019
வாழ்க்கை உன் கையில்
அறியாமையே அறிவு...
மண்ணின் கவிதைகள்
Saturday, November 09, 2019
நட்பு
Saturday, November 02, 2019
மழையின் பாடல்
வானிலிருந்து வீழும்
வெள்ளி இழை…
இயற்கை தன்
வயல்களையும்,
பள்ளத்தாக்குகளையும்
பொலிவாக்க
என்னை
அழைத்துக் கொள்கிறாள்…
நான்
விடியலின்
தோட்டத்தை அலங்கரிக்க
இறைவனின்
மகுடத்திலிருந்து
உதிர்க்கப்பட்ட
முத்து...
நான்
மேகத்தின் கண்ணீராய்
கொட்டும் போது
மலைகள் சிரிக்கின்றன…
நான்
'தாழ்ந்து'
தொடும் போது
மலர்கள்
'மலர்ச்சி' கொள்கின்றன…
நான்
வீழும் போது
உலகம் மகிழ்ந்து
எழுகிறது….
பூமியும் மேகமும்
காதலர்கள்..
நான்
அவர்கள் அன்பின்
தூதுவன்…
நான்
பலர் தாகத்தைத்
தீர்க்கிறேன்..
பலர் காயங்களை
ஆற்றுகிறேன்…
இடி எனது
வருகையை
உலகுக்குக் கூறும்
வானவில்
எனது
நிறைவைச்
சொல்லும்...
அகிலத்தில்
ஐம்பூதங்களின்
சேர்கையாய்
பிறந்த உயிர்கள் எல்லாம்
மரணத்தின்
விரிந்த சிறகுகள் கொண்டு
மேலெழும்பி
பேரான்மாவை அடைவது போல்...
நானும்
கடற்பரப்பில் இருந்து
தோன்றி
காற்றோடு
மேலெழும்புகிறேன்…
நீரின்றி வறண்டு
எனக்காகக் காத்திருக்கும்
வெளியைக் கண்டால்
காதலோடு கீழிறங்கி
மலர்களையும்
மரங்களையும்
அணைத்துக் கொள்கிறேன்…
நான்
தூறலாய் உங்கள்
ஜன்னல் தொடும் போது
எனது மெல்லிசையை
எல்லோரும் கேட்கிறார்கள்
மென்மையான சிலரே
மனத்தில் கொள்கிறார்கள்…
காற்றின் சூடு
என்னைப் பிரசவித்தது…
நானோ அதை
தணித்து விட்டேன்…
பெண் ஆணிடமிருந்து
பெற்ற பலத்தால்
அவனையே வெல்வது போல்…
நான்
கடலின் பெருமூச்சு
சமவெளியின் சிரிப்பு
வானத்தின் கண்ணீர்…
எனவே
பாசத்தின்
பெருமூச்சோடு,
ஆன்மவின்
மகிழ்ச்சியோடு
எண்ணற்ற
நினைவுகளின்
கண்ணீரோடு
எனது அன்பைப்
பொழிகிறேன்…
Friday, November 01, 2019
கண்ணீரும் புன்னகையும்...
Tuesday, October 29, 2019
விடுதலை
உனக்காக காத்திருப்பேன்...
I will keep still and wait like the night with starry vigil
and its head bent low with patience.
The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky.
Then thy words will take wing in songs from every one of my birds' nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.
Monday, October 28, 2019
தனிமை
Thursday, October 24, 2019
பூவின் பாடல்
Wednesday, October 23, 2019
பயம்
மலையில் பிறந்து ..
காட்டைக் கடந்து ..
வயலில் விளைத்து..
கடலில் விழுவதுதானே..
நதியின் போக்கு...
Wednesday, October 16, 2019
வெண்பா
அமுதன் அவர்களின் அறிவுறுத்தல்
தடியடியால் தோன்றிவிடும் சச்சரவு; நாட்டில்
திட்டம் சரியாகத் தீட்டிவிட்டு நாம்போடும்
என் பதில்
திட்டங்கள் தந்தாலும் சட்டங்கள் போட்டாலும்
எட்டா மனத்தினில் எள்ளளவும் மாற்றமில்லை
கொட்டிக் கெடுத்திடுவார் குப்பையை நாற்சந்தில்
தட்டிச் சரிசெய்தா லென்?
Tuesday, September 03, 2019
சொல்லடா உன்தன் காதல்!!!
சில்லென வீசும் காற்றில்
சிலிர்த்திட மழையின் தூறல்
மெல்லென என்னைத் தீண்ட
மனத்தினில் உன்தன் நேசம்
புல்லிலே பனியைப் போல
பூத்திடும் மாயம் என்ன!!!
சொல்லிலே தேனைக் கூட்டிச்
சொல்லடா உன்தன் காதல் ...
என்னுளே செய்யும் மாற்றம்
எழுத்திலே வருவ தில்லை
கண்ணிலே உன்தன் காட்சி
கனவிலும் உன்தன் ஆட்சி
எண்ணமோ உன்னை அன்றி
எதிலுமே செல்வ தில்லை
தண்ணெனும் நீரும் என்னைத்
தனலெனக் காய்ப்ப தென்ன!!!
Friday, August 23, 2019
கண்ணனைக் கொண்டாடுவோம்
Wednesday, August 21, 2019
சென்னை தினம்
சென்னை எங்கள் மாநகரம்
சிறப்பாய் வங்கக் கடலோரம்
கண்ணைக் கவரும் கடற்கரையும்
கப்பல் வணிகத் துறைமுகமும்
எண்ணம் சிறக்க நூலகமும்
இனிய பாடச் சாலைகளும்
விண்ணை முட்டும் மேம்பாலம்
விரைந்துச் செல்லும் வாகனமும்
கலைகள் நிறைந்த கூடங்களும்
காலம் கடந்த கோவில்களும்
இலையில் சோறும், தனித்தமிழும்
எங்கள் பெருமை எடுத்துரைக்க
தலையில் மகுடம் அமைவதுப்போல்
தமிழர் நாட்டின் தலைநகராய்
நிலையாய் தமிழ்போல் பல்லாண்டு
நிலைத்தே இருக்கும் வாழ்த்திடுவோம்....
Sunday, August 04, 2019
Thursday, June 27, 2019
Wednesday, May 08, 2019
வாழும் வரைக் காதலிப்போம்
காதலில் கலந்திருக்கும்
அந்தக் காலம்
கனவுகள் சிறகடிக்கும் காலம்..