சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Thursday, May 28, 2020
கொரோனா - கல்விக் கொள்கை
Thursday, May 21, 2020
என் மனமென்னும் மேடையில்
Sunday, May 10, 2020
குறள் தாழிசை
Saturday, May 09, 2020
குறும் பா
Wednesday, May 06, 2020
மல்லிகை பூச்சரம்
உன் சின்னச் சிரிப்பு
Sunday, May 03, 2020
அனுபவம்
Monday, April 27, 2020
தடம்
Thursday, April 09, 2020
கண்ணனாக வா!!
Tuesday, April 07, 2020
யோசனை பூக்கள்
Saturday, April 04, 2020
மின்னற் பொழுதுகள்
Friday, April 03, 2020
ஒற்றை எதிரி
ஒற்றை எதிரி நீ
Tuesday, March 31, 2020
கடல்
நிழல்கள் நகர்ந்த பொழுது...
Sunday, March 29, 2020
சிந்தனைகள் சந்தித்தால்
கொரானா
Sunday, December 29, 2019
2019 --》2020
Saturday, December 14, 2019
நானும் நீயும்
Sunday, November 24, 2019
குறிஞ்சிப் பாட்டு
Tuesday, November 12, 2019
எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!
Sunday, November 10, 2019
வாழ்க்கை உன் கையில்
அறியாமையே அறிவு...
மண்ணின் கவிதைகள்
Saturday, November 09, 2019
நட்பு
Saturday, November 02, 2019
மழையின் பாடல்
வானிலிருந்து வீழும்
வெள்ளி இழை…
இயற்கை தன்
வயல்களையும்,
பள்ளத்தாக்குகளையும்
பொலிவாக்க
என்னை
அழைத்துக் கொள்கிறாள்…
நான்
விடியலின்
தோட்டத்தை அலங்கரிக்க
இறைவனின்
மகுடத்திலிருந்து
உதிர்க்கப்பட்ட
முத்து...
நான்
மேகத்தின் கண்ணீராய்
கொட்டும் போது
மலைகள் சிரிக்கின்றன…
நான்
'தாழ்ந்து'
தொடும் போது
மலர்கள்
'மலர்ச்சி' கொள்கின்றன…
நான்
வீழும் போது
உலகம் மகிழ்ந்து
எழுகிறது….
பூமியும் மேகமும்
காதலர்கள்..
நான்
அவர்கள் அன்பின்
தூதுவன்…
நான்
பலர் தாகத்தைத்
தீர்க்கிறேன்..
பலர் காயங்களை
ஆற்றுகிறேன்…
இடி எனது
வருகையை
உலகுக்குக் கூறும்
வானவில்
எனது
நிறைவைச்
சொல்லும்...
அகிலத்தில்
ஐம்பூதங்களின்
சேர்கையாய்
பிறந்த உயிர்கள் எல்லாம்
மரணத்தின்
விரிந்த சிறகுகள் கொண்டு
மேலெழும்பி
பேரான்மாவை அடைவது போல்...
நானும்
கடற்பரப்பில் இருந்து
தோன்றி
காற்றோடு
மேலெழும்புகிறேன்…
நீரின்றி வறண்டு
எனக்காகக் காத்திருக்கும்
வெளியைக் கண்டால்
காதலோடு கீழிறங்கி
மலர்களையும்
மரங்களையும்
அணைத்துக் கொள்கிறேன்…
நான்
தூறலாய் உங்கள்
ஜன்னல் தொடும் போது
எனது மெல்லிசையை
எல்லோரும் கேட்கிறார்கள்
மென்மையான சிலரே
மனத்தில் கொள்கிறார்கள்…
காற்றின் சூடு
என்னைப் பிரசவித்தது…
நானோ அதை
தணித்து விட்டேன்…
பெண் ஆணிடமிருந்து
பெற்ற பலத்தால்
அவனையே வெல்வது போல்…
நான்
கடலின் பெருமூச்சு
சமவெளியின் சிரிப்பு
வானத்தின் கண்ணீர்…
எனவே
பாசத்தின்
பெருமூச்சோடு,
ஆன்மவின்
மகிழ்ச்சியோடு
எண்ணற்ற
நினைவுகளின்
கண்ணீரோடு
எனது அன்பைப்
பொழிகிறேன்…
Friday, November 01, 2019
கண்ணீரும் புன்னகையும்...
Tuesday, October 29, 2019
விடுதலை
உனக்காக காத்திருப்பேன்...
I will keep still and wait like the night with starry vigil
and its head bent low with patience.
The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky.
Then thy words will take wing in songs from every one of my birds' nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.
Monday, October 28, 2019
தனிமை
Thursday, October 24, 2019
பூவின் பாடல்
Wednesday, October 23, 2019
பயம்
மலையில் பிறந்து ..
காட்டைக் கடந்து ..
வயலில் விளைத்து..
கடலில் விழுவதுதானே..
நதியின் போக்கு...
Wednesday, October 16, 2019
வெண்பா
அமுதன் அவர்களின் அறிவுறுத்தல்
தடியடியால் தோன்றிவிடும் சச்சரவு; நாட்டில்
திட்டம் சரியாகத் தீட்டிவிட்டு நாம்போடும்
என் பதில்
திட்டங்கள் தந்தாலும் சட்டங்கள் போட்டாலும்
எட்டா மனத்தினில் எள்ளளவும் மாற்றமில்லை
கொட்டிக் கெடுத்திடுவார் குப்பையை நாற்சந்தில்
தட்டிச் சரிசெய்தா லென்?
Tuesday, September 03, 2019
சொல்லடா உன்தன் காதல்!!!
சில்லென வீசும் காற்றில்
சிலிர்த்திட மழையின் தூறல்
மெல்லென என்னைத் தீண்ட
மனத்தினில் உன்தன் நேசம்
புல்லிலேப் பனியைப் போல
பூத்திடும் மாயம் என்ன!!!
சொல்லிலேத் தேனைக் கூட்டிச்
சொல்லடா உன்தன் காதல் ...
என்னுளேச் செய்யும் மாற்றம்
எழுத்திலே வருவ தில்லை
கண்ணிலே உன்தன் காட்சி
கனவிலும் உன்தன் ஆட்சி
எண்ணமோ உன்னை அன்றி
எதிலுமே செல்வ தில்லை
தண்ணெனும் நீரும் என்னைத்
தனலெனக் காய்ப்ப தென்ன!!!
Friday, August 23, 2019
கண்ணனைக் கொண்டாடுவோம்
Wednesday, August 21, 2019
சென்னை தினம்
சென்னை எங்கள் மாநகரம்
சிறப்பாய் வங்கக் கடலோரம்
கண்ணைக் கவரும் கடற்கரையும்
கப்பல் வணிகத் துறைமுகமும்
எண்ணம் சிறக்க நூலகமும்
இனிய பாடச் சாலைகளும்
விண்ணை முட்டும் மேம்பாலம்
விரைந்துச் செல்லும் வாகனமும்
கலைகள் நிறைந்த கூடங்களும்
காலம் கடந்த கோவில்களும்
இலையில் சோறும், தனித்தமிழும்
எங்கள் பெருமை எடுத்துரைக்க
தலையில் மகுடம் அமைவதுப்போல்
தமிழர் நாட்டின் தலைநகராய்
நிலையாய் தமிழ்போல் பல்லாண்டு
நிலைத்தே இருக்கும் வாழ்த்திடுவோம்....
Sunday, August 04, 2019
Thursday, June 27, 2019
Wednesday, May 08, 2019
வாழும் வரைக் காதலிப்போம்
காதலில் கலந்திருக்கும்
அந்தக் காலம்
கனவுகள் சிறகடிக்கும் காலம்..
Tuesday, April 09, 2019
திருவல்லிக்கேணி
பள்ளி கொண்ட பெருமானாய்
பார்த்தன் தனக்கே சாரதியாய்
உள்நின் றொளிரும் ஓர்சுடராய்
உரைத்த உரையில் உட்பொருளாய்
வல்லித் தாயார் அருள்செய்யும்
மங்கை ஆழ்வார் தொழுதேத்தும்
அல்லிக் கேணி நின்றானை
அருளை வேண்டி பணிந்தேனே!
Monday, January 21, 2019
காதலித்துப் பார்
பின்னனி இசையாய்
எப்பொழுதும் உன் நினைவுகள்...
வார்த்தைகள் அற்று
மௌனம் பூசி நிற்கும்
உதடுகள்...
கண்களோ!
கதை பேச
காதல் சொல்லக் காத்திருக்கும்...
அவசரமாய் துடிக்கும் என் இதயத்தோடு
போட்டிப் போட்டு
தோற்றுப் போகும் அறிவு...
நடக்காமல்
மிதக்கும்
கால்கள்...
உனக்கான என் கவிதையை மட்டும்
எழுதிக் காட்டும்
கைகள்...
உன் பார்வைத் தூண்டிலில்
சிக்கிக் கொள்ள தவம் கிடக்கும்
என் விழி மீன்கள்...
நீயும் என்னைக்
கொஞ்சம்
காதலித்துப் பார்...
என் சின்ன அசைவுகளுக்கும்
சரியான அர்த்தம்
உனக்குப் புரியும்..
கொஞ்சம்
காதலித்துப்
பார்......
Saturday, December 22, 2018
பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைத் துறைமுக தமிழ் சங்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட கருத்துகள்..
பெண்கள் இன்று கண்டிருக்கும் முன்னேற்றங்களுக்கும் இனி காணவிருக்கும் உயர்வுகளுக்கெல்லாம் பாரதியின் பங்கு முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது என்பது உண்மையானது.
Thursday, November 22, 2018
பொய்த்துப் போன மழை
குதூகலமாய் காத்திருக்க
சொட்டிச் சென்றதிங்கே
சென்னைப் பக்கம்
வந்த மழை….
வங்கக் கடலோரம்
வளர்கின்ற காற்றழுத்தம்
தெற்குக் கரைநோக்கி
சீறிப் பாய்ந்தங்கே
தென்னைகள் சாய்த்ததென்ன
சேதங்கள் செய்ததென்ன…
வாராமல் வறட்சியிங்கே!...
வந்தபுயல் வேகத்தால்
வீடுகள் விளைநிலங்கள்
வீதியெங்கும் சோகமங்கே!...
மும்மாரிப் பொழிவதுவும்
முப்போகம் விளைவதுவும்
எப்போது நடக்குமிங்கே
ஏனிந்த மாற்றமிங்கே…
வாக்குறுதி தந்துவிட்டு
வேளை வந்தபோது
போக்குக்காட்டி ஏமாற்றும்
எங்களூர் அரசியலை
எளிதில்நீ கற்றாயோ
மழையே!!!!
லஞ்சம்
கொடுத்துக் கெடுப்பதுவும்
எதுவும்
கொடுக்காமல் வாட்டுவதும்
எங்கள் குணம்
ஏனிங்கே நீவந்தாய்…
எதிர்பார்ப்பு அதிகமென்றால்
ஏமாற்றமும் அதிகமென்று
எங்களுக்கே தெரிந்திருக்க
எதைச் சொல்ல நீ வந்தாய்?
“நல்லார் ஒருவர் உளரேல்….”
வள்ளுவரே நில்லும்…..
அந்த ஒரு நல்லவருக்காக
காலமெல்லாம் காத்திருப்போம்….
நாங்கள் மட்டும் மாறமாட்டோம்
Tuesday, November 20, 2018
மரம்
படைப்பின்
உச்சம்
மனிதமா?
மரமா?
மண்தாங்கும்
மரமே அந்த
மண்ணைக்
காக்கும்
மனிதனுக்குண்டா
பிரதியுபகாரம்
செய்யும்
இந்த குணம்...
இயற்கையிலிருந்து
எடுத்துக் கொண்டதையெல்லாம்
அவனால்
திருப்பித் தர இயலுமா....
மரத்தின்
உயரம் அதன்
வேரின் ஆழத்தைச்
சொல்லும்..
உயர்ந்த
மனிதர்களாய்
உலாவருபவர்கள்
தங்கள்
உள்ளத்தின்
ஆழத்தை
உலகுக்குக்
காட்டத்தயாரா..
தன்னை
அழிப்பவனுக்கும்
மரம்
நிழலையேத் தருகிறது..
மனிதன்
தான் உயர
எத்தனைச் சவ பெட்டிகளை
படிகட்டுகளாய்
அமைத்துக் கொள்கிறான்...
இயற்கையை
அழித்து ஒன்று...
சக மனிதனின்
கனவுகளை
சிதைத்து ஒன்று...
சொந்தங்களை
அழித்து ஒன்று
சுய மரியாதையை
அழித்தும்
ஒன்று...
உயரம்
மரத்தின்
கம்பீரம்...
மனிதனுக்கு...
பணமே
உயரத்தை அளக்கும்
கருவி...
உயர உயர
அவன்
தாழ்ந்து போகிறான்....
மரம்
காய் தரும்
கனி தரும்
நிழல் தரும்
மழை தரும்....
மனிதன்
மண்ணழித்து
மரம் அழித்து
மனிதம் அழிந்து
நிற்கிறான்..
மனிதன்
உலகுக்கு
அச்சம்...
மரமோ
உலகின்
ஆச்சரியம்....
படைப்பின்
சிறப்பு
மரமா?
மனிதமா?....