முடியாமல் தொடர்கிறது...
பேசாத வார்த்தைகள்
மௌனத்தில் கரைகிறது...
இல்லாத ஓர் உணர்வை
உள்நெஞ்சம் உணர்கிறது...
சொல்லாத செய்திகளைச்
சுகமென்றே சுமக்கிறது...
பொல்லாத நிஜங்களையோ
பொய்யென்றே சொல்கிறது...
பொழுதெல்லாம் புதிதான
கற்பனையில் திளைக்கிறது...
புரியாத மொழியெல்லாம்
பூவிழிகள் பேசிடவே...
வாய்பேசும் மொழியெல்லாம்
வசப்படாமல் போகிறது...
நில்லாத நாடகத்தில்
நிஜமெல்லாம் கனவாக...
கலைந்திடாத கனவெல்லாம்
கற்பனையில் நிஜமாகும்...