Tuesday, November 12, 2019

எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!

Rabindranath Tagore's Poem 
'Where The Mind is Without Fear'
in Tamil
எங்கே
மனம்
பயமின்றி இருக்கிறதோ!!!

எங்கே
பெருமிதத்துடனும்
தைரியத்துடனும்
தலை 
நிமிர்ந்து நிற்கிறதோ!!!

எங்கே
அறிவு
சுதந்திரமாக
செயல்படுகிறதோ!!!

எங்கே
பூமி
குறுகிய கோடுகளால்
துண்டாடப்படாமல்  இருக்கிறதோ!!!

எங்கே
உண்மையின் ஆழத்திலிருந்து
வார்த்தைகள் வெளிவருகின்றதோ!!!

எங்கே
அயர்வில்லாத
விடாமுயற்சி
முழுமையான வெற்றியை
அடையமுடிகிறதோ!!!


எங்கே
பகுத்தறிவுச் சிந்தனை
மூடப்பழக்கத்தின் முன்
மண்டியிடாமல்
தன் பாதையில்
பயணிக்கிறதோ!!!

எங்கே
புதிய சிந்தனை
புதிய செயல்கள்
என்னும்
விசாலப் பார்வைக்குள்
மனம் உன்னால்
செலுத்தப்படுகிறதோ!!!

இறைவா!!!
அங்கே
அந்த சுதந்திர உலகில்
என் நாடு
விழிக்கட்டும்...

Sunday, November 10, 2019

வாழ்க்கை உன் கையில்

இந்தக்  காகிதம் 
என்னில் 
எழுது எழுது
என்று என்னை
அழைத்துக் கொண்டே
இருக்கிறது....

இப்படித்தான் 
வாழ்வின் இனிமைகள் 
எல்லாம் நம்மை
வாழ்ந்துப் பார்,
அன்பை உணர்ந்துப் பார்
என்று வரவேற்றவாறே
இருக்கின்றன...

பிறகு ஏன் இன்னும் 
பொறாமை, வெறுப்பு, கோபம்
எனும் நெருப்பால்
நம்மை நாமே
அழித்துக் கொண்டே
இருக்கிறோம்...

அறியாமையே அறிவு...

I AM IGNORANT of absolute truth. But I am humble before my ignorance and therein lies my honor and my reward.

Khalil Gibran

நான் 
'முழுமையான உண்மை '
என்பதை
அறியாமலிருக்கிறேன்...
ஆனால் என்
அறியாமையை உணர்ந்து 
அடக்கத்தோடு இருக்கிறேன்...
அதனாலேயே 
மதிக்கப்படுகிறேன்...

தமிழில் எனது கவிதையாக்கம்...

மண்ணின் கவிதைகள்

'Trees are poems the earth writes 
upon the sky, We fell them down and 
turn them into paper,
That we may record our emptiness.'

Kahlil Gibran

மண்
வான் மீது எழுதும் 
கவிதை 
மரங்கள்...
நாம்
மரங்களை அழித்து 
காகிதமாக்கி
நமது
வெறுமைகளை
பதிவு செய்து கொண்டிருக்கிறோம்...

எனது கவிதையாக்கம் தமிழில் ...