Thursday, February 26, 2009

2. ஈழத் தமிழர் இடர்

பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்கக்
காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால்
காவிரி தன்னொடு என்றுமே தீராதோ
ஈழத் தமிழர் இடர்.

வெண்பா வரைந்தேன் விரைந்து

தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
வெண்பா வரைந்தேன் விரைந்து.