Sunday, November 10, 2019

வாழ்க்கை உன் கையில்

இந்தக்  காகிதம் 
என்னில் 
எழுது எழுது
என்று என்னை
அழைத்துக் கொண்டே
இருக்கிறது....

இப்படித்தான் 
வாழ்வின் இனிமைகள் 
எல்லாம் நம்மை
வாழ்ந்துப் பார்,
அன்பை உணர்ந்துப் பார்
என்று வரவேற்றவாறே
இருக்கின்றன...

பிறகு ஏன் இன்னும் 
பொறாமை, வெறுப்பு, கோபம்
எனும் நெருப்பால்
நம்மை நாமே
அழித்துக் கொண்டே
இருக்கிறோம்...

No comments: