வாழ்க்கை பயணத்தில் சில
மின்னல் பொழுதுகள்...
நம்மை நமக்கே
அடையாளம் காட்டும்
அர்த்தம் நிறைந்த நிமிடங்கள்...
அவனுக்கு!
அரும்பு மீசை
தோன்றிய பொழுது
முதன் முதலாய் ஒரு
ஆண் மகனாய்
தன்னை உணர்ந்த
அழகிய தருணம்...
மறக்க முடியா
மின்னல் பொழுது!!
அவளுக்கு
தினமும் சென்ற பாதைதான்
திரும்பி அவன் பார்த்த பொழுது
பெண்மையை உணர்ந்து
வெட்கம் கொண்ட
வெளிச்ச நிமிடம்
அழகிய மின்னல் பொழுது!!
வெளியுலகில்
முதல்முதலாய்
அவமானப் பட்ட
அந்த நொடி...
தன்மானத்தை
தட்டி எழுப்பியத் தருணம்...
நம்மைச் செதுக்கிய
நல்லதொரு நிமிடம்...
யாருக்கில்லை அந்த
அற்புத மின்னல் பொழுது!!
முதல் வெற்றி
வாசல் தட்டிய
வசந்த நிமிடம்...
காதல் சொன்ன
கணப் பொழுது...
வலியின் உச்சத்திலும்
பிள்ளை ஈன்ற
பாசப் பொழுது
கையேந்திய பிள்ளை
கண்ணோடு கண் நோக்கி
புன்னகைத்த
பொன்னான பொழுது...
தாயின் சிதையில்
தீயை மூட்டிய
நெஞ்சைப் பிசையும்
நிமிடங்கள்...
யாருக்கும் உண்டு
இப்படி சில நிமிடங்கள்...
வாழ்வில்
மறக்க முடியா
மின்னல் பொழுதுகள்...
4 comments:
நல்லதொரு கவிதை மின்னற் பொழுதுகள்
அருமையான வரிகள்
பாராட்டுகள்
ஆம்
மின்னற் பொழுதுகள்
நன்றி..
நன்றி yarlpavanan
Post a Comment