எப்பொழுதெல்லாம்
தர்மம் அழிந்து அதர்மம்
தலைதூக்குகிறதோ...
அப்பொழுதெல்லாம்
'நான் 'அவதரிப்பேன்...
ஏற்றுக் கொண்டோம்
இறைவா... நீ
கண்ணனாக வா
'கொரோனா' வாக வேண்டாம்...
அழிக்கப்படுவது
அதர்மமாக இருக்கட்டும்...
அகங்காரம், ஆணவம், பேராசை
அழியட்டும்...
காக்கப்படுவது
கருணையாக ,
காதலாக
இருக்கட்டும்...
மயக்கத்தைப் போக்கி
மையலை மாற்று...
மரணத்தைக் காட்டி
வையத்தை அழிக்காதே...
மனிதம் காக்க
மனிதரை விட்டுவை...
மதத்தினைத் தாண்டி
மனிதரை வாழ செய்...
இறைவா
கெடுப்பதல்ல
கொடுப்பதே உன்செயல்
அழிப்பதல்ல
காப்பதே உன்கடன்...
கண்ணனாக வா!!
‘கொரோனா’வாக வேண்டாம் !!
No comments:
Post a Comment