கொல்லைப்புற வாசல் திறந்ததும்
காத்திருந்தது வெண்ணிலவு
விடியலைத் தாண்டியும்
வாழ்த்துச் சொல்ல
வந்தது …
"பெண்ணே
பிறந்த நாள் வாழ்த்துகள்"!!!
நீயும் என்னைப் போல்
இருப்பாயாக!!
இருளையும்
அழகாக்கும்
வலிமை பெற்றிருப்பாயாக!
சூரிய ஒளியை
இதமாக்கி
தருவது போல்
உன் அனுபவங்களை
அர்த்தமாக்கி
அனைவருக்கும் தருவாயாக!
நட்சத்திரங்கள் அழகுதான்
மின்னுபவைத் தான்
என்றாலும்
உனக்கென்று
உள்ள ஒளியை
பிரகாசமாக்கிக் கொள்!
அதிலும்
அழகு கொட்டிக்கிடக்கிறது!
கஷ்டங்கள் உன்னைத்
தேய்த்து மறைத்தாலும்
மீண்டும் எழும்
நெஞ்சம் கொள்!!!
வாழ்த்துச் சொல்லி
மென்மையாக மறைந்தது நிலவு!
நிலவே!
நன்றி!
உன்னைப் போலவே
அமைதியாக,
மனத்தில் அழகாக
வாழ வாழ்த்தியமைக்கு
நன்றி !!!
பிரிய மனமில்லாமல்
இரவை, நிலவை,
எதிர்பார்த்து…
நான்….