Wednesday, July 30, 2025

பட்டுத் தெளியாமல் விட்டு விடாது

(வைரமுத்து அவர்கள், திரைப்படத்துறையில் இருந்தபடி திரைப்படங்கள் குறித்து விமர்சனமாய் எழுதிய `தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம் என்ற கவிதையில் சினிமா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து,

இளைஞர்களின் கைகளிலேனும் இந்த அழுக்குத் திரை சலவை செய்யப்படுமா? சற்று பொறுத்திருப்போம். இல்லையெனில் மக்களைச் சுருள வைக்கும் திரைப்படச் சுருளை ஒரு தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்

என்று எழுதியிருந்ததை பார்த்ததும் எனக்கு இப்படி எழுத தோன்றியது..)



அழுக்குப் பிடித்த

வெள்ளித் திரையை

வெளுக்க

இளைஞர்களெல்லாம்

டிஜிட்டல் அறையில்

கூடினார்கள்…

 

புதிய பார்வை

புதிய குறிக்கோள்

இயல்பான

அற்புதமான நடிப்பு

 

ஆண் பெண்

பேதமில்லை

கூட்டாக அனைவரும் கூடி

சில

படைப்புகளை

டிஜிட்டலில்

தந்தார்கள்..

 

பார்த்தது

வெள்ளித்திரை...

எதிர்த்தது!!

முடியவில்லை…

 

எப்படி

சமாளிப்பது

வெள்ளித் திரை

மாற்றம் பெற்று

டிஜிட்டலில் இறங்கியது…

ஓடிடியில்

ஒளிவு மறைவின்றி

போட்டுக் காண்பித்தது

 

தணிக்கை குழு

இல்லை…

கண்காணிக்க

ஏதுமில்லை

 

ஒவ்வொறுவர்

தொலைபேசியிலும்

வக்கிரம்

வலைவிரித்தாடியது…

 

கோபம்,கொலை

காதல், காமம்

இரத்தம்

அனைத்தும்

அதிகமாக

மிக அதிகமாக

 

சற்று

தெளிந்தவர்

திசையறிந்து கொண்டார்

 

நல்லதும் கொட்டதும்

பிறித்தாய்ந்து கொண்டார்..

 

இளையவர் பலரோ

இதில் மாட்டிக் கொண்டனர்…

 

எப்பொழுதும்

ஏதோ ஒன்றை

தொலைபேசியில்

பார்த்துக் கொண்டே

 

குடும்பம்

அன்பு

பக்கத்தில் இருப்பவர்

புத்தகம் படிப்பது

இப்படி

அனைத்தும் மறந்து

 

அயல் நாட்டு

மோகத்தில்

உணவு

உடை பழக்கம்

அனைத்தும் மாற

 

தாய் மொழி மாற

தாயும் தந்தையும்

முதியவர் இல்லம் தேட

 

மாறிப் போனது

எல்லாம் மாறிப் போனது…

 

டிஜிட்டல் துறையில்

ஒருபடி ஏறிய

நிலையில்

பலப்படி

இறக்கமும்

கண்டது

இந்தியா…

 

இன்றும் சிலர்

“இதுவும் கடந்து போகும்”

என்பதில்

நம்பிக்கையோடு….

 

“பட்டுத் தெளியாமல் விட்டு விடாது”

என்பதால்

 

பழைய

பழக்கங்களை

டிஜிட்டலில் ஏற்றியபடி…

Saturday, July 26, 2025

அந்தி வானம்



அந்தி வானம்…                                

 

நிலா

பெண்ணை

வண்ண

கோலமிட்டு

அழைக்கிறது

அந்தி…

 

இரவு

சீவி முடித்து

சில பூக்களைச்

சொறுகியிருக்கிறதோ!!!


இரவே

எங்கே வைத்தாய்

நட்சத்திர புள்ளிகளை!

வண்ணத்தோடு

கோலமிட காத்துகிடக்கிறது

வானம்...

 

கருப்பும் வெளுப்புமாய்

சில மேகங்கள்

நீலமாய் சிறு வானம்

மஞ்சளாய்

ஆரஞ்சு நிறமாய்

சிவப்பாய்

சிரிக்கும் அந்தி

இங்கென்ன

ஐபிஎல்

மட்டைப்பந்தா

நடக்கிறது….


நிலா பெண்ணின் 

வீட்டை

அலங்காரம்

செய்கிறதோ!

அந்தி...


மிகப் பெரிய

இரங்கோலி

அந்தி வானம்...

 

Thursday, July 24, 2025

தீதும் நன்றும்

இடிக்கின்ற மேகம் மின்னல்

இசையோடு கருவி வானம்

கொடுக்கின்ற மழையின் தூறல்

கொள்கின்ற தன்மை யாலே

குடிக்கின்ற நீரும் ஆகும்

குழம்பியதே சேறும் ஆகும்

பெறுகின்ற இயல்பி னாலே

பெற்றதன் நன்மை மாறும்


வருகின்ற தீதும் நன்றும்

வழிகாட்டும் உணர்ந்து கொள்வாய்

தருகின்ற தீமை தன்னை

தண்ணீரைப் போலே ஏற்பாய்

கிடைக்கின்ற அனுப வந்தான்

கற்கின்ற பாடம் ஆகும்!!

போகின்ற திசைகள் எல்லாம்

புகழோடு வாழ வைக்கும்

Tuesday, March 04, 2025

எனது கவிதைகள் போட்டிக்கானவை அல்ல…

போட்டி

சில சமையம்

ஒரு நல்ல சந்தர்ப்பமாக

அமையலாம்

கவிதை படைக்க…

 

அனால்

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல

 

மனத்தில் எழும்

ஒரு நொடி சிந்தனை

கவிதையாய்

வெளிப்படும்…

 

காதலே ஆனாலும்,

கற்பனை மனத்தில்

கருவானால் தான்

கவிதை ஆகும்

 

செந்தமிழ் சொல்லும்

தெளிந்த சிந்தனையும்

சேர்ந்தால் மட்டுமே

கற்பனை சிறகடித்து

வானம் தொடும்

 

கவிதைப்பூ

மலரும்

 

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல

 

நெஞ்சில் மலர்ந்த

விதையின்

துளிர்கள்

 

சிந்தனை சிற்பியில்

உருவான

முத்துக்கள்…

 

கற்பனை வானின்

நட்சத்திரங்கள்

 

எனது கவிதைகள்

போட்டிக்கானவை அல்ல…

Tuesday, February 18, 2025

அப்பாடா...!


அன்று

அம்மா மடி விட்டு

ஓட ஆரம்பித்தேன்…

 

இளமையில்

இன்பங்கள் அனைத்தும்

துய்த்தேன்…

 

குடும்பம்  குழந்தைகள்

கடமைகள் கடந்து

வந்தேன்…

 

துன்பங்களும்

எனக்கு

துணையானதைக்

கண்டேன்.

 

திரும்பிப் பார்க்கும் போது

எனது

இரகசியங்கள்

எனைக் கண்டு

சிரிப்பதைப்

பார்க்கிறேன்…

 

நான் வாங்கிய

முதல்  வண்டி…

எனது கடைசி

பயணத்திற்கு

உதவாது …

 

எனது

சொத்துக்கள்

கைமாறிப்போகும்…

 

என்னுடன்

துணையாக

என் துணைவியும்

வரயியலாது….

 

இனி

எதற்கு

என்னுடையது என்று ஒன்று

 

எனது

இருப்பை

நியாயப்படுத்த

 

இனி ஈயப் போகிறேன்…

 

சிறுவர்களுக்கு

கல்வி

பெரியவர்களுக்கு

உணவு

முயற்சி செய்பவருக்கு

இயன்ற உதவி

 

எனது

இருப்பை

நியாயப்படுத்த

 

இனி ஈயப் போகிறேன்…

 

அப்பாடா…

இப்பொழுதுதான்

நான் எனக்காக

வாழ்கிறேன்…