உன்னைப் பாட
என்னைப் பணிக்கும் பொழுது
எனது நெஞ்சம்
பெருமையால்
அடைத்துக் கொள்கிறதே!
உனது திருமுகத்தை
கண்டதும் எனது
கண்ணில் நீர்
பெருக்கெடுக்கிறதே!
எனது வாழ்வின்
கஷ்ட நட்டங்கள்
ஒன்றாகி
இனிமையான பாடலாக
வெளிவருகிறதே!
மகிழ்ச்சில் திளைக்கும் பறவை
கடலைத் தாண்டி
உல்லாசமாகப் பறப்பதைப் போல்
உனதன்பால் என் சிந்தனை
சிறகடிகிறதே!
உன் முன்
ஒரு கவிஞனாகவே
நான் நிற்கிறேன்
எனது கவிதையில்
நீ மகிழ்வாய்
என்று எனக்குத் தெரியும்
எனது இசையின்
மெல்லிய அலைகளின்
ஸ்பரிசத்தால்
உன்னைத் தொட்டு
இன்பமடைகிறேன்…
இறைவா
அந்த இன்ப மயக்கத்தில்
என்னை மறந்து
உன்னை
‘நண்பனே’
என்றழைகிறேனே!
நீ
இறைவனல்லவா!
அதனால் தான் பாரதியும்
பரசிவ வெள்ளம் என்ற பாட்டில்
"எண்ணமிட்டாலே போதும்
எண்ணுவதே இவ் இன்பத்
தண் அமுதை உள்ளேததும்பப்புரியுமடா
எங்கும் நிறைந்திருந்த ஈச
எங்கும் நிறைந்திருந்த ஈச
வெள்ளம் என் அகத்தே
பொங்குகின்றது என்று
எண்ணிப் போற்றி நின்றால்
போதுமடா"
என்று பாடுகிறாரோ!
No comments:
Post a Comment