இறைவா
நீ எங்கும் நிறைந்திருப்பவன்
எனவே
நீ வாழும்
இவ்வுடலை
மிகவும் பரிசுத்தமாக
வைத்திருக்க முயல்கிறேன்…
பகுத்தறிவை எனக்குள்
விதைத்தவன் நீ
எனவே
எனது சிந்தனையிலிருந்து
பொய்களை
விலக்கிடுவேன்…
எனது உள்ளத்தில்
நீ உறைந்திருக்கிறாய்
எனவே
எனது உள்ளத்திலிருந்து
தீய எண்ணங்களையெல்லாம் விலக்கி
அன்பை வெளிப்படுத்த முற்படுவேன்
எனது
செயல்களுக்கெல்லாம்
வலிமையை நீயே தருகிறாய்
எனவே
எனது செயல்களின் மூலமே
உன்னை வெளிப்படுத்த முயல்கிறேன்
No comments:
Post a Comment