ஆண் பிரசவித்த
பெண் இவள்.
ஆண்டாண்டு காலமாய்
இவளின் ஆளுமைக்கு
அஸ்த்திவாரமிட்டார்
ஆழமாய்...
ஒவ்வொரு கல்லாய் வைத்து
கொஞ்சம் கொஞ்சமாய்
முன்னேறி
நிமிர்ந்து நிக்க வைத்தார்
கண்டார் கண்படும்
கொள்ளை அழகாய்...
பிறகு
"கட்டிக்கொடுத்துவிட்டார்"
எங்களுக்கு...
எங்கள்
குடும்ப விஷயம்
வெளி கேட்காமலும்
குளிரும் மழையும்
உள் தெரியாமலும்
எங்களை
ஒன்றாக்கி
அணைத்துச் செல்கிறாள்
இவள்
இன்று
எங்கள் கொண்டாட்டங்கள்
துயரங்கள்
எல்லாம்
இவள் மடியில்
எங்கள் பரம்பரைகள்
இவள்
காலடியில்...
Friday, August 04, 2006
Thursday, July 27, 2006
வலி
பிரசவ `வார்ல்` டில்
பேறுக்காக காத்துக்கிடந்தேன்.
பொய் வலிதான்
புறப்பட்டு வந்து விட்டேன்
பாதுகாப்பாய்
பிள்ளைப்பெற...
அந்தோ !
எனக்கு நடந்தது
`அவசர` சிகிச்சை
அறுவை சிகிச்சை
ஆனால்
அவசியமே இல்லாமல்
வலியே இல்லாமல்
குழந்தை
பிறப்பிக்கப்பட்டது.
அழுதது,
சிரித்தது,
வளர்ந்தது...
இன்னமும்
வலித்துக்கொண்டேயிருக்கிறது...
மனம்,
வலிக்காக ஏங்கி...
நிரந்தர வலியை
எனக்களித்தவர்கள்
அங்கே
சிரித்துக் கொண்டேயிருகிறார்கள்
மனங்களை விட்டு
பணங்களை மட்டுமே
`எண்ணி`க் கொண்டு...
பேறுக்காக காத்துக்கிடந்தேன்.
பொய் வலிதான்
புறப்பட்டு வந்து விட்டேன்
பாதுகாப்பாய்
பிள்ளைப்பெற...
அந்தோ !
எனக்கு நடந்தது
`அவசர` சிகிச்சை
அறுவை சிகிச்சை
ஆனால்
அவசியமே இல்லாமல்
வலியே இல்லாமல்
குழந்தை
பிறப்பிக்கப்பட்டது.
அழுதது,
சிரித்தது,
வளர்ந்தது...
இன்னமும்
வலித்துக்கொண்டேயிருக்கிறது...
மனம்,
வலிக்காக ஏங்கி...
நிரந்தர வலியை
எனக்களித்தவர்கள்
அங்கே
சிரித்துக் கொண்டேயிருகிறார்கள்
மனங்களை விட்டு
பணங்களை மட்டுமே
`எண்ணி`க் கொண்டு...
Thursday, July 06, 2006
பள்ளிகூடத்தில்
பிள்ளைகள்
படிக்கின்றனர்..
காலை வேளையில்
காதுகினிமையாய்
கேட்கும் ஒலிகளெதுவெனவே!
சிட்டுக் குருவியும்
சின்னக் குயிலும்
மைனாவும் கூவும்
எனவே
மனப்பாடம் செய்கின்றாரவர்..
நன்றேதும் உண்டோ!
என்றேனும் ஓர் நாள்
எவரேனும் கேட்டாரோ?
கட்டிடக் காட்டுக்குள்ளே
கருங்குயிலின் கீதம் தன்னை!
கண்டோரும் உண்டோ!
குருவிகளின் கூட்டம் தன்னை...
மயக்க வரும் மாலையிலே
நீல வான ஓடையிலே
நீந்தி வரும் வெண்ணழகை
கண்டதுண்டோ!
கரும் புகையின்
திரையின்றி...
நின்றதுண்டோ
நெடும் மணற்பரப்பில்
நெத்திலியின் வாசமின்றி...
நிறைந்ததுண்டோ நெஞ்சம்
நீழ் கடலின்
நிசப்தத்தில்...
அலைக்கடலின்
ஆரவாரதில்...
பார்த்ததுண்டோ!
பட்டணத்தில்
படு சுத்தமாய்
ஓர் இடம்...
பிள்ளைகள்
படிக்கின்றனர்..
காலை வேளையில்
காதுகினிமையாய்
கேட்கும் ஒலிகளெதுவெனவே!
சிட்டுக் குருவியும்
சின்னக் குயிலும்
மைனாவும் கூவும்
எனவே
மனப்பாடம் செய்கின்றாரவர்..
நன்றேதும் உண்டோ!
என்றேனும் ஓர் நாள்
எவரேனும் கேட்டாரோ?
கட்டிடக் காட்டுக்குள்ளே
கருங்குயிலின் கீதம் தன்னை!
கண்டோரும் உண்டோ!
குருவிகளின் கூட்டம் தன்னை...
மயக்க வரும் மாலையிலே
நீல வான ஓடையிலே
நீந்தி வரும் வெண்ணழகை
கண்டதுண்டோ!
கரும் புகையின்
திரையின்றி...
நின்றதுண்டோ
நெடும் மணற்பரப்பில்
நெத்திலியின் வாசமின்றி...
நிறைந்ததுண்டோ நெஞ்சம்
நீழ் கடலின்
நிசப்தத்தில்...
அலைக்கடலின்
ஆரவாரதில்...
பார்த்ததுண்டோ!
பட்டணத்தில்
படு சுத்தமாய்
ஓர் இடம்...
இளைஞனுக்கு
இளமையின் பாதையில்
முதல் அடி
வாழ்க்கையின்
முதற்படி
புதிதாய் பூத்த மலர் நீ
வாசத்தை வானம்
முழுதும் பரவவிடு..
காலத்தை வீணாக
கழிக்காதே
கடன் வாங்கமுடியாதது அது...
இலட்சியங்களை
கூட்டு
திறமைகளை
பெறுக்கு...
உன் காலடியில்
கிடக்கிறது
எதிர் காலம்
மிதித்துவிடாதே
நீயே அழிவாய்
எடுத்தணைத்துக்கொள்
நீயே வெற்றிபெருவாய்...
மன இருளை
அகற்றி விடு
வெளிச்சமாகும்
உன் இலட்சியப்பாதை...
இளமையை
அசைப்போடுவதே
முதுமை
இளமை மட்டுமே
வாழ்வு...
புரிந்து கொள்
புரிய வை...
பழமைகளை ஜீரணித்து
புதிய விழிப்பு கொள்...
புதிதாய் பார்
புதிதாய் யோசி
உன் பதிலுக்காக
காத்துக்கிடக்கின்றன
பலப் புதிர்கள்...
கட்டிய சோற்றையும்
சொல்லிய சொல்லையும்
மீறி நட...
உணர்வு கொள்
உணர்ச்சி கொள்
இன்பம் கொள்
துன்பம் தேடு...
தோல்விகள்
உன்
முயற்சியின்
உழைப்பின்
வெளிப்பாடுகள்...
சோம்பலின்
முரண்பாடுகள்...
நாளைய உன்
வெற்றிக்கான
ஏணிப்படிகள்.
Friday, June 30, 2006
நானும் நீயும்
* புத்தகச் சாலை
சொர்கத்தின் வாசல் எனக்கு
உனக்கோ
திக்கு தெரியாத காடு
* கதை கவிதை
கரும்பெனக்கு
கானல் நீருனக்கு
* எழுத்தெனக்கு
இதயத்தின் பக்கத்தில்
எழுதும் முறைமறந்து
`தட்டித் தட்டியே`
பழகிவிட்ட உன்
கைகளுக்கு
`ஃபைல்` களின் பக்கங்களை
சொர்கத்தின் வாசல் எனக்கு
உனக்கோ
திக்கு தெரியாத காடு
* கதை கவிதை
கரும்பெனக்கு
கானல் நீருனக்கு
* எழுத்தெனக்கு
இதயத்தின் பக்கத்தில்
எழுதும் முறைமறந்து
`தட்டித் தட்டியே`
பழகிவிட்ட உன்
கைகளுக்கு
`ஃபைல்` களின் பக்கங்களை
`க்ளிக்` கத்தான் தெரியும்,
பக்கங்களின் புரட்டல்களில்
பித்தானவள் நான்.
* இரவில் நிலவில்
இருளின் ஒளியில்
நெருப்பு பந்தங்களில்
விழி தீண்டி
நானிருக்க
இதமான குளிரில்
இமை மூடி தூங்கிவிட்டாய்
நீ...
* கதம்ப மாலைப் போல்
எதிர்மறையாகவே
பிணைந்திருக்கின்றோம்
இருப்போம்
மாறுபட்ட வண்ணங்கள்
குழைந்தால்
புதுப்புது எண்ணங்கள்
சாத்தியமே!...
தாய்மை
நீராடி நோன்பிருந்து
நித்தம் தவமிருந்து-தான்
கருவுற்ற நேரத்தில்
கவலை மறந்து
சிரித்திருந்து சீராய்
உணவு அருந்தி-பிள்ளை
பெற்றுவிட்ட போதினிலும்
தன்னுயிரை அமுதாக்கி
ஊட்டுவித்து மகிழ்ந்திருந்து
உள்ளம் நிறைந்திருந்து-தான்
உற்ற பசி மறந்திருநது
விழித்திருக்கும் வேளையிலும்
உடனிருந்து விளையாடி
இமைமூடி இருக்கையிலும்-சேய்தன்
பக்கத்தில் துணையிருந்து
பார்த்திருப்பாள் காத்திருப்பாள்
பிள்ளையவன் பெரிதாகி-அயல்நாடு
பறந்த பின்னும்
அவனுக்காக காத்திருப்பாள்
கூட்டிப்போகவில்லை என்றாலும்
கொள்ளிப்போட வந்திடுவான்-மகன்...
நித்தம் தவமிருந்து-தான்
கருவுற்ற நேரத்தில்
கவலை மறந்து
சிரித்திருந்து சீராய்
உணவு அருந்தி-பிள்ளை
பெற்றுவிட்ட போதினிலும்
தன்னுயிரை அமுதாக்கி
ஊட்டுவித்து மகிழ்ந்திருந்து
உள்ளம் நிறைந்திருந்து-தான்
உற்ற பசி மறந்திருநது
விழித்திருக்கும் வேளையிலும்
உடனிருந்து விளையாடி
இமைமூடி இருக்கையிலும்-சேய்தன்
பக்கத்தில் துணையிருந்து
பார்த்திருப்பாள் காத்திருப்பாள்
பிள்ளையவன் பெரிதாகி-அயல்நாடு
பறந்த பின்னும்
அவனுக்காக காத்திருப்பாள்
கூட்டிப்போகவில்லை என்றாலும்
கொள்ளிப்போட வந்திடுவான்-மகன்...
Thursday, June 29, 2006
இளமை பருவம்
அனுபவம் இல்லாதது
அனுபவம் பெறுவது
நிரந்தரம் இல்லாதது
நிச்சயம் வருவது
கனவுகள் நிறைந்தது
கனவாகிப்போவது
ஆக்கமுமானது, அழிவுமானது,
இனியது அது
இன்னாததும் அதுவே
இளைஞனே
கனியிருக்க காய் எதற்கு!
அனுபவம் பெறுவது
நிரந்தரம் இல்லாதது
நிச்சயம் வருவது
கனவுகள் நிறைந்தது
கனவாகிப்போவது
ஆக்கமுமானது, அழிவுமானது,
இனியது அது
இன்னாததும் அதுவே
இளைஞனே
கனியிருக்க காய் எதற்கு!
Monday, June 26, 2006
கான்கீரிட் காடு
வெட்டப்பட்டது...
மரங்கள்
கட்டப்பட்டது...
கூண்டுகள்
விரட்டப்பட்டது...
குயிலினங்கள்
அடைக்கப்பட்டது...
காற்று
இழக்கப்பட்டது...
மனிதத்தன்மை
வெட்கப்பட்டது...
விடியல்.
மரங்கள்
கட்டப்பட்டது...
கூண்டுகள்
விரட்டப்பட்டது...
குயிலினங்கள்
அடைக்கப்பட்டது...
காற்று
இழக்கப்பட்டது...
மனிதத்தன்மை
வெட்கப்பட்டது...
விடியல்.
கையில் கொழுக்கட்டை
கண்ணிரண்டில்
கருனை வெள்ளம்
கழலனிந்த
காலிரண்டில்
கருத்தைப் பதித்தோர்க்கு
துந்திக்கைக் கொண்டு
நம்பிக்கையூட்டும்
நாயகனே!
பருத்த தொந்தியும்
பால் கொழுக்கட்டையும்
பிடித்த பிள்ளைக்க்கு
இனித்த மனத்தோடு
இலையாக காயாக
பூவாக கனியாக
இன்னும்
யாராக காணிடினும்
யாவர்க்குமானவனே
ஞானமே வடிவான
நாயகனே!
வினாயகனே!
நானும் உனை போற்றுகின்றேன்
நலம் தருவாய்
எழில் மிகு
தமிழன்னை
கரம் பற்றி
நான் போகும் பாதையிலே
ஞான ஒளி காட்டிடுவாய்
ஏற்றிடுவாய் எம்மை
இதயத்தே நீயிருந்து...
கண்ணிரண்டில்
கருனை வெள்ளம்
கழலனிந்த
காலிரண்டில்
கருத்தைப் பதித்தோர்க்கு
துந்திக்கைக் கொண்டு
நம்பிக்கையூட்டும்
நாயகனே!
பருத்த தொந்தியும்
பால் கொழுக்கட்டையும்
பிடித்த பிள்ளைக்க்கு
இனித்த மனத்தோடு
இலையாக காயாக
பூவாக கனியாக
இன்னும்
யாராக காணிடினும்
யாவர்க்குமானவனே
ஞானமே வடிவான
நாயகனே!
வினாயகனே!
நானும் உனை போற்றுகின்றேன்
நலம் தருவாய்
எழில் மிகு
தமிழன்னை
கரம் பற்றி
நான் போகும் பாதையிலே
ஞான ஒளி காட்டிடுவாய்
ஏற்றிடுவாய் எம்மை
இதயத்தே நீயிருந்து...
Subscribe to:
Posts (Atom)