எடுத்துக் கொண்டதை
திருப்பித் தந்தது
மழை...
வெளிச்ச உண்டியல்
உடைந்து
இருட்டு தரையில்
சிதறிய
சில்லரை காசுகள்
நட்சத்திரங்கள்...
சூரிய மாலையில் இருந்து
உதிர்ந்த
மல்லிகை பூக்கள்
நட்சத்திரங்கள்...
சினுங்கி சினுங்கி
தூக்கம் கலைத்தது
அலை பேசி...
திறக்கத் திறக்க
தெளிவு பிறந்தது
புத்தகம்...
குழைத்து, குதப்பி
கொட்டிவிடும்
குழந்தைக்காக
காத்திருக்கிறது
தட்டில் உணவு...
வானத் தரையில்
கொட்டிவிட்ட
கறுப்புச் சாயம்
இருள்...
அழுகை
கண்ணம் துடைத்து
நிமிர்ந்த போது
சுவடுகள் இன்றி
பளிச்சென்றிருந்தது
மனம்...
எப்பொழுதும்
தலைகுனிய
வேண்டியிருக்கிறது
இவரிடம்
சவரத்தொழிலாளி
மழையைத் தடுக்கும்
குட்டி வானம்
குடை...
3 comments:
2ம் பா ரொம்ப நல்லா இருக்கு
2ம் பா ரொம்ப நல்லா இருக்கு
நன்றி 🙏
Post a Comment