நகர்ந்த பொழுதுதான்
'நான் '
நிலைத்து நின்றேன்...
தாயின் நிழல்
நகர்ந்த பொழுது,
தானாக எழுந்து
நடக்கலானேன்...
தந்தையின் நிழல்
நகர்ந்த பொழுது,
எனக்கென
தடம் ஒன்று
இருக்கக் கண்டேன்...
நல்லாசிரியர் நிழல்
எனைவிட்டு
நகர்ந்த பொழுது,
என் அறிவின் ஒளியில்
இயக்கம் கொண்டேன்...
இணையில்லா
ஈசனருள்
இருக்கும் வரையில்
வாழ்வில்
இருள் என்பதே
இல்லை கண்டேன்!!.
No comments:
Post a Comment