தெருவோரம்
குப்பை இல்லை
சந்தையிலே
சண்டை இல்லை ...
சுத்தம் என்பதை
சமூகம் உணர்ந்தது
சத்தம் இன்றி
சாலைகள் இருந்தன...
வண்டியில் சென்ற
மக்களைப் போலீஸ்
வணங்கிச் சொன்னது
வீட்டில் இருக்க...
வீட்டில் இருந்தவர்
உணவை வீணாக்காமல்
சமைத்து உண்டனர்
தருமம் செய்தனர்...
அரசு
'அதிகார' திமிரின்றி
அமைதி காத்தது...
தேக்கம் இன்றி
செயல்கள் நடந்தது...
சிந்தனை ஒன்றாய்
தேசம் மலர்ந்தது
நச்சுக் கிருமியே!!
ஒற்றை எதிரி நீ
ஒற்றை எதிரி நீ
உன்னை வீழ்த்த
ஒற்றுமை கண்டது
இந்தியா
ஒன்றாய் நின்றது...
சற்றே
திரும்பிப் பார்க்கிறேன்
'சுதந்திர இந்தியா'...
ஒற்றை எதிரி
வீழ்த்தப் பட்டதும்
வீழ்ந்து விட்டதே
ஒற்றுமை, அமைதி...
எத்தனை பிரிவுகள்..
எத்தனை சண்டைகள்...
இன்றைய
'ஒற்றை எதிரி' நீ
உன்னை
விட்டு விடுவதா?
விரட்டி அடிப்பதா?!!!
2 comments:
ஒற்றை வரியில் சொன்னால்...அற்புதம்.
மிக்க நன்றி
Post a Comment