இரத்தக் கசிவு
எனக்குத் தான்…
சிக்கலில்லாமல் இருக்க
சில வழிகள்…
எல்லோரும் சொன்னார்கள்
'நடப்பது நடக்கும்
கவலை மற'…
ஆனால்
நடந்ததை
மறப்பதெப்படி?
'துக்கத்தை
தூர எறிந்தால்
தூக்கம் வரும்'…
என் துக்கங்களை
எங்கே
எறிவது….
நீ கிழித்த
என் இதயத்தை
மூடி மறைத்து விட்டேன்,
மூளைதான்
காட்டிக் கொடுத்துவிட்டது…
ஆஹா
இது என்ன!
என் கவிதை
என்னை ஆற்றுகிறதே!
என் புண்களையெல்லாம்
துடைத்து எறிகிறதே!
காதலிக்கின்றேன்..
கவிதை மலரை
என் இதயத்தில்
மலரவைப்பாயா?
------