Thursday, July 02, 2026

மழையும் பத்தாவது மாடியும்

என் அலுவலகத்தின்

பத்தாவது மாடியில்

இந்திய வானிலை ஆய்வுத் துறை

அதற்கு மேல்

ஒரு பந்து இருக்கும்…

அது ஒரு ரேடார்.

மழை புயல் பற்றி அறிய உதவும்…

முன்பு

அங்கு யாரையும்

செல்லவிடமாட்டார்கள்…

 

அனால்

நாங்கள் விதிவிலக்கல்லவா!!

மழை வந்தால்

நானும் என் தோழியும்

அங்கு சென்று விடுவோம்..

 

பத்தாவது மாடியிலிருந்து

மழை பார்ப்பது

அருமையான விஷயம்..

 

ஒரு பக்கம்

தலைமைச் செயலகம்

அடுத்து

ரிசர்வ் வங்கி

இந்த பக்கம்

பாரிமுனை

பீச் இரயில் நிலையம்

ஊர்ந்து செல்லும் இரயில்கள்

வேகமாய் கடந்து செல்லும்

வாகனங்கள்…

 

மழை வந்தால்

அனைத்தும் நனையும்..

துடைத்து விட்டார் போலிருக்கும் சென்னை

டிரோன் வருவதற்கு முன்பே

நாங்கள் இரசித்த டிரோன் ஷாட் ….

 

ஒவ்வொரு மழைத்துளியும்

இதோ என்நெஞ்சில்

இன்றும் பொழிகிறது…

மறக்க முடியாத

காலம் அது…

 

அலுவலக வேலையின்

இடையில்

சிறிது நேரம்

எங்களுக்கானதாய் …..

 

வீடு வாங்க

நினைத்த போது

நான் பத்தாவது மாடியை

தேர்ந்தெடுத்தது

அதற்காகத் தான்..

 

மழையை

மேலிருந்து பார்ப்பது

அழகோ அழகு..

 

அதுவும் எங்கள் வீட்டின்

தெற்குபுறம்

ஒரு பெரிய பால்கனி

காற்றும், மழையும்

அருமையாய் வீசும்..

 

மழையில் நனையாமல்

இரசிக்க அழகான இடம்.

எவ்வளவு நேரம் மழை பெய்தாலும்

அங்கேயே இருப்போம்

நானும், என் கணவரும்…

என் மகனும் கூட…

 

இரசனையில் நாங்கள் அனைவரும்

ஒரேமாதிரி..

 

நனைந்து இரசிக்கத்தான்

கீழே சென்று விடுகிறோம்…

பிறர் இந்த வயதில்

இப்படி நனைகிறாரே

என்று சற்று

வேடிக்கையாய் பார்ப்பார்கள்…

நான் கண்டு கொள்வதே இல்லை….

கணவரும் சிரித்த படி….

No comments: