விளம்/மாங்காய் + மா + தேமா
களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா நாளும்
அலைந்திங்கே பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும் மண்ணை
முளைத்திட்டச் செடியோ அன்றி
முற்றிய மரமே காக்கும்.
விளம்/மாங்காய் + மா + தேமா
களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா நாளும்
அலைந்திங்கே பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும் மண்ணை
முளைத்திட்டச் செடியோ அன்றி
முற்றிய மரமே காக்கும்.

[திரு அமுதா கொடுத்த படத்திற்கான வெண்பா]
மற்றொறு வெண்பா
கட்டுமோ செங்கதிரைச் சின்னதொரு நூற்கயி(று)
எட்டுமோ யென்மனதை யிவ்வாடை -ஒட்ட
எனதுடல் போர்த்தவே யில்லைமறுப் புங்கள்
மனதிலுள்ள் தேகறுப் பு.
கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய
சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர்
வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்
சொல்லே மிகவும் சுடும்.
[தலைவன் மேல் தலைவிக்கு ஏனோ கோபம். அதனால் அவனைப் புறக்கணித்து வாய்ச் சொல் தவிர்க்கிறாள். ஆனாலும் கண்ணால் தன் கோபத்தைக்காட்ட, தலைவன் கூற்று.]

