Thursday, July 27, 2006

வலி

பிரசவ `வார்ல்` டில்
பேறுக்காக காத்துக்கிடந்தேன்.
பொய் வலிதான்
புறப்பட்டு வந்து விட்டேன்
பாதுகாப்பாய்
பிள்ளைப்பெற...
அந்தோ !
எனக்கு நடந்தது
`அவசர` சிகிச்சை
அறுவை சிகிச்சை
ஆனால்
அவசியமே இல்லாமல்

வலியே இல்லாமல்
குழந்தை
பிறப்பிக்கப்பட்டது.
அழுதது,
சிரித்தது,
வளர்ந்தது...

இன்னமும்
வலித்துக்கொண்டேயிருக்கிறது...
மனம்,
வலிக்காக ஏங்கி...

நிரந்தர வலியை
எனக்களித்தவர்கள்
அங்கே
சிரித்துக் கொண்டேயிருகிறார்கள்
மனங்களை விட்டு
பணங்களை மட்டுமே
`எண்ணி`க் கொண்டு...