சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Tuesday, July 27, 2010
பாதை நமதே பயணம் நமதே!
தரவுக் கொச்சகக் கலிப்பா
காய்+காய்+காய்+காய்
கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,
மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே
முற்றெனவும் முடிந்திடாதுன் எண்ணத்தைச் சீராக்கி
உற்றதொரு நல்வழியை உனதாக்கி நடப்பாயே!
உண்மையின்பம்
தரவுக் கொச்சகக் கலிப்பா
[காய் காய் காய் காய்]
நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)