மாலையில்கெஞ்சலும்
இரவில்
கொங்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது..
மறுபடி வந்தது
மாலை
நினைவில் வந்தது
கெஞ்சலும் கொஞ்சலும்..
சிரித்தும்
மகிழ்ந்தும்
கடந்த நாட்களில்
ஒரு நாள் மாலை
வந்தது ஊடல்..
மறுநாள் அலுவலில்
கையும் ஓடலை
காலும் ஓடலை..
மாலைவரை
காத்திருக்க
மனமும் விடவில்லை..
தொலைபேசி
சினுங்கியது
கணவன் காலிங்.... ....
மறுமுனை
அழுதது
மனைவி க்ரையிங்.... ....?
மாலையில்
கெஞ்சலும்
இரவில்
கொஞ்சலும்
காலையில்
அலுவலில்
மறந்தே போனது...
கருவாய் உன்னுள்நான் காலந்தபோதுஅந்தஇருட்டுச் சிறையில்இருந்த சுதந்திரம்வெளிச்ச வெளியில் வெட்டப்பட்ட சிறகுகளாய்...மடிகிடந்து மார்பணைத்துகழுத்து வளைவில்முகம் புதைத்துகண்ணங்குழியகண்ட என் கனவுபஞ்சு மெத்தை தலையணையில்எட்டாகனியாய்வட்ட மாத்திரைக்குள்...அறியா பருவத்தில்உணரா இனிமைகள்காலம் கடந்துதூங்கா என் கண்களில் எழுதா கவிதைகளாய்...கனவு மெய்ப்படவேண்டும்ஓர் உயிர்ப்புஉன்னுள் கருவாய் மறுபடியும்...
கையிருப்பைக்
கரைத்து
என் காலுக்கு
ஓய்வளிக்க
கருப்புக்குதிரையாய்
என் வீட்டில் நீ...
கொஞ்சமாய்க்
கொண்டு
அதிகமாய்
கொடுத்தாய் மைலேஜ்...
'சாம்ப்'
உன் பொதுப்பெயர்...
'TN 22 Z 9326'
உன் சொந்த பெயர்...
ஓய்வு பெரும்
தொழிளாளிக்கு
உண்டாகும்
ஓர் ஈர்ப்பு..
தொழிற்சாலைமேல்...
ஆனால்,
உனக்காக
கலங்குவதோ
உன் அதிகாரி...
நீயோ,
வேண்டுதல் வேண்டாமை
இல்லாதவனாய்
அடுத்த
உன் எஜமானிக்கான
உழைப்போடு....
இரவில் வாங்கிய
விடியல்
எங்கள் விவேகத்தின்
வெளிச்சம்...
எங்கள் கொடியை
உயர்த்தவே
'குமரன்' கள் நாங்கள்
கொலையுண்டோம்...
மாற்றானுடையதை
மிதிக்க அல்ல
மறுக்கவே
ஆசைப்பட்டோம்...
இறக்கப் படாமல் இறங்கிய
கொடியின்
இடத்தை பற்றியது
ஏற்றாத போதும்
எங்கள் உள்ளத்தின்
உச்சியில் பறந்த
எம் கொடி
இன்னா செய்தார்க்கு
நாண
நன்னயம் செய்யும்
நோக்கு அது...
பெற்ற பிள்ளைக்கு
பால் என்ன
பழஞ்சோறும்
புகட்டாதாள் எம்
பாரதத்தாய்...
என்றாலும்
பிச்சை வாழ்க்கை
அச்ச உணர்வை
ஊடட்வில்லை எங்கள்
உதிரத்தில்...
அத்து விட்டது
விலங்கு - ஆக
பெற்றுவிட்டோம்
புதுவாழ்வு...
கட்டிவிட்டோம்
மனக்கோவில்...
அங்கே....
ஜாதி பேய்களை
கொண்று
மத பேதங்கள்ற்ற
ஓர்வாயில்...
காமங்கள் குரோதங்கள்
விட்டு
கடன் தொல்லை
அழித்ததோர் வாயில்...
பட்டப் பகலில்
கொள்ளை மற்றும்
பட்டினிச் சாவுமிங்கில்லை
என
பறைச்சாற்றி
நிக்குதோர் வாயில்...
திறந்து கிடக்குதோர்
வாயிலாங்கே
திறமையுள்ளோர்
எல்லோர்க்கும்
வேலை...
நட்ட நடுவினில்
எம் நாடு
பச்சை பசுமை
போர்த்த பூங்காடு...
பூக்களின் நடுவினில்
புதுநங்கை நல்லாள்
பட்டத்துன்பங்கள்
மறந்துவிட்டாள்
பந்தைபிடித்தே
ஆடுகின்றாள்
பாடுகின்றாள் எங்கள்
பாரதத்தாய்...