Saturday, February 03, 2007

மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு

கருவாய் உன்னுள்
நான் காலந்தபோது
அந்த
இருட்டுச் சிறையில்
இருந்த சுதந்திரம்

வெளிச்ச வெளியில்
வெட்டப்பட்ட சிறகுகளாய்...

மடிகிடந்து
மார்பணைத்து
கழுத்து வளைவில்
முகம் புதைத்து
கண்ணங்குழிய
கண்ட என் கனவு

பஞ்சு மெத்தை தலையணையில்
எட்டாகனியாய்
வட்ட மாத்திரைக்குள்...

அறியா பருவத்தில்
உணரா இனிமைகள்

காலம் கடந்து
தூங்கா என்
கண்களில்
எழுதா கவிதைகளாய்...

கனவு மெய்ப்பட
வேண்டும்
ஓர் உயிர்ப்பு
உன்னுள் கருவாய்
மறுபடியும்...

No comments: