Monday, February 27, 2017

அருட்சோதி வள்ளலார்

அன்பே கடவுள் 
கருணையே 
அவனை காணும் வழி
என்பதை
உணர்ந்தவர் 
அஃதை தன் 
உள்ளத்தே கொண்டவர்

அருந்தமிழ் தனக்கே
அடிகள் அவர்கள்
ஆற்றிய தொண்டுக்கள்
அளப்பரியவை..

நற்றமிழ் நலனை
நானிலம் அறிய
அறமென உணர்ந்ததை
ஆறாயிரம்
தீந்தமிழ் பாக்களில்
தெவிட்டா தேனாம்
‘திருவருட்பா’ தந்தவர்

பாருள மொழிகள் பல
பைந்தமிழ் பிள்ளைகள்
என்றறிவித்த
மொழியியலாளர்...

ஆதியும் அந்தமுமில்லா
அருட்பெருஞ்சோதியாய்
விளங்கும் உண்மைப் பொருளை
உலகத்தோர் உணர்ந்துய்ய
ஞான வழி காட்டிய
ஞானாசிரியர்.....

நூலாசிரியர்... 

பதிப்பாசிரியர்... 

சித்த மருத்துவர்... 
என பன்முக கலைஞர்

வள்ளுவன் வாக்கை
வாழ்ந்து காட்டிய
வடலூர் வள்ளலார்
வழங்கிய நன்னெறி
'ஜீவ காரூண்ய ஒழுக்கம்'

உயிர்களெல்லாம் உறவெனக் கண்ட
உத்தமர் வழியை
உள்ளத்திலிருத்துவோம்
அன்பை விதைத்து
அறம் வளர்ப்போம்

வாழ்க வள்ளலார் நாமம்
வளர்க அன்பு நெறி...