Wednesday, July 14, 2010

நெஞ்சில் தைக்குமே முள்.

வெண்தாழிசை

கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.

[1. இது ஒரு மூன்றடிப்பாடல்.

முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள்.

சிரித்து வாழ வேண்டும்.

வெண்செந்துறை [ ஆறு சீர்கள்]

1.பட்டுச் சிறகை விரித்துப்
பறக்கும் அழகைப் பாரு
சிட்டைப் போலே நீயும்
சிரித்து வாழப் பழகு!.

2. ஓடி யாட வேண்டும்
உண்மை பேச வேண்டும்
கூடி வாழ மற்றோர்
குறைகள் மறக்க வேண்டும்!

3. தேடிப் பெற்ற பொருளை
சேர்த்துக் குவித்தி டாமல்
வாடும் ஏழை மக்கள்
வறுமைப் போக்க ஈவாய்!

நல்லோர் நட்பு.

எண்சீர் வெண்செந்துறை






காசு பணத்தால் விளையும் நன்மை


கையில் உள்ள வரைதான் உண்மை


நேசங் கொண்ட நல்லோர் நட்போ


நிலைத்த யின்பம் நிச்சயந் தருமே!