Wednesday, July 14, 2010

சிரித்து வாழ வேண்டும்.

வெண்செந்துறை [ ஆறு சீர்கள்]

1.பட்டுச் சிறகை விரித்துப்
பறக்கும் அழகைப் பாரு
சிட்டைப் போலே நீயும்
சிரித்து வாழப் பழகு!.

2. ஓடி யாட வேண்டும்
உண்மை பேச வேண்டும்
கூடி வாழ மற்றோர்
குறைகள் மறக்க வேண்டும்!

3. தேடிப் பெற்ற பொருளை
சேர்த்துக் குவித்தி டாமல்
வாடும் ஏழை மக்கள்
வறுமைப் போக்க ஈவாய்!

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.குமார்.