சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
அடிமறிமண்டில ஆசிரியப்பா
.
Show all posts
Showing posts with label
அடிமறிமண்டில ஆசிரியப்பா
.
Show all posts
Tuesday, October 13, 2009
நல்லதே நாடுக
இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே!
நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே!
நல்லதோர் விதையே மரமா கிடுமே!
நல்லெணம் மட்டுமே நமையுயர்த் திடுமே!
அன்புடை வாழ்க்கை
பணிவுடன் உழைப்பாய் புகழுடன் உயரவே!
துணிவுடன் எழுவாய் துயர்தனை வெல்லவே!
அணியுடன் சேர்ந்தே அழகாம் செய்யுளே!
கருத்துடன் கருமம் சிறக்கும் என்றுமே!
கரும்புடன் இனிப்பு கலந்தே இருக்குமே!
விரும்பியே வினைச்செய விளையும் நன்மையே!
நன்மையேச் செய்திட நானிலம் வாழுமே!
அன்பினைக் காட்டியே ஆளுவோம் மனதையே!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)