கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய
சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர்
வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்
சொல்லே மிகவும் சுடும்.
[தலைவன் மேல் தலைவிக்கு ஏனோ கோபம். அதனால் அவனைப் புறக்கணித்து வாய்ச் சொல் தவிர்க்கிறாள். ஆனாலும் கண்ணால் தன் கோபத்தைக்காட்ட, தலைவன் கூற்று.]