Friday, August 18, 2006

நாளைய இந்தியா


அன்று

சிப்பாய்கள்
கலகத்தில்
சிதைக்கத்தான்
பட்டார்கள்...

எங்கள்
'ஜான்சி ராணி'களும்
'கட்டபொம்மன்'களும்
வீழ்த்தத்தான்
பட்டார்கள்

கொடி காத்த
'குமரன்'களும்
கொல்லத்தான்
பட்டார்கள்
ஆனால்

இன்று

இவர்களின்
முயற்சிகள்
எங்களின்
வெற்றிகளாயின..

வழி காட்டும்
வெளிச்சங்களாயின

இலட்சியப் பாதையில்
சுதந்திரம் சுவாசித்து
வெற்றி நடை
போடுகின்றோம்
நாம்

முடிந்துவிடப்போவதில்லை
எங்கள் முயற்சிகள்

நாளை

புதிய இலக்குகள்
நிர்ணயிக்கப்படும்
இலட்சியங்கள்
எட்டப்படும்
சிகரங்கள்
தொடப்படும்..

சிதைந்து போன
சிப்பாய்களின்
தோள்களில்
கனவுகளைச்
சுமந்து நிற்கும்
எங்களின்
தலைமுறைகள்

நாளைய உலகில்
வெளிச்சம் காட்டும்
வெள்ளியாய்
நிற்கும்

வேற்றுமை
வீண்சண்டை
வெறி கொண்ட அதிகாரம்
வீணர் வாய் பேச்சு
பொய்மை
'களை'
பொசுக்கி
நன்மை வளர்க்கும்
வளம் பெறும்
வல்லரசாகும்...