Thursday, July 06, 2006

பள்ளிகூடத்தில்
பிள்ளைகள்
படிக்கின்றனர்..

காலை வேளையில்
காதுகினிமையாய்
கேட்கும் ஒலிகளெதுவெனவே!

சிட்டுக் குருவியும்
சின்னக் குயிலும்
மைனாவும் கூவும்
எனவே
மனப்பாடம் செய்கின்றாரவர்..

நன்றேதும் உண்டோ!
என்றேனும் ஓர் நாள்
எவரேனும் கேட்டாரோ?

கட்டிடக் காட்டுக்குள்ளே
கருங்குயிலின் கீதம் தன்னை!

கண்டோரும் உண்டோ!
குருவிகளின் கூட்டம் தன்னை...

மயக்க வரும் மாலையிலே
நீல வான ஓடையிலே
நீந்தி வரும் வெண்ணழகை

கண்டதுண்டோ!
கரும் புகையின்
திரையின்றி...

நின்றதுண்டோ
நெடும் மணற்பரப்பில்
நெத்திலியின் வாசமின்றி...

நிறைந்ததுண்டோ நெஞ்சம்
நீழ் கடலின்
நிசப்தத்தில்...
அலைக்கடலின்
ஆரவாரதில்...

பார்த்ததுண்டோ!
பட்டணத்தில்
படு சுத்தமாய்
ஓர் இடம்...

இளைஞனுக்கு


இளமையின் பாதையில்
முதல் அடி
வாழ்க்கையின்
முதற்படி

புதிதாய் பூத்த மலர் நீ
வாசத்தை வானம்
முழுதும் பரவவிடு..

காலத்தை வீணாக
கழிக்காதே
கடன் வாங்கமுடியாதது அது...

இலட்சியங்களை
கூட்டு
திறமைகளை
பெறுக்கு...

உன் காலடியில்
கிடக்கிறது
எதிர் காலம்
மிதித்துவிடாதே
நீயே அழிவாய்
எடுத்தணைத்துக்கொள்
நீயே வெற்றிபெருவாய்...

மன இருளை
அகற்றி விடு
வெளிச்சமாகும்
உன் இலட்சியப்பாதை...

இளமையை
அசைப்போடுவதே
முதுமை
இளமை மட்டுமே
வாழ்வு...

புரிந்து கொள்
புரிய வை...

பழமைகளை ஜீரணித்து
புதிய விழிப்பு கொள்...

புதிதாய் பார்
புதிதாய் யோசி

உன் பதிலுக்காக
காத்துக்கிடக்கின்றன
பலப் புதிர்கள்...

கட்டிய சோற்றையும்
சொல்லிய சொல்லையும்
மீறி நட...

உணர்வு கொள்
உணர்ச்சி கொள்
இன்பம் கொள்
துன்பம் தேடு...

தோல்விகள்
உன்
முயற்சியின்
உழைப்பின்
வெளிப்பாடுகள்...

சோம்பலின்
முரண்பாடுகள்...
நாளைய உன்
வெற்றிக்கான
ஏணிப்படிகள்.