Thursday, July 06, 2006

பள்ளிகூடத்தில்
பிள்ளைகள்
படிக்கின்றனர்..

காலை வேளையில்
காதுகினிமையாய்
கேட்கும் ஒலிகளெதுவெனவே!

சிட்டுக் குருவியும்
சின்னக் குயிலும்
மைனாவும் கூவும்
எனவே
மனப்பாடம் செய்கின்றாரவர்..

நன்றேதும் உண்டோ!
என்றேனும் ஓர் நாள்
எவரேனும் கேட்டாரோ?

கட்டிடக் காட்டுக்குள்ளே
கருங்குயிலின் கீதம் தன்னை!

கண்டோரும் உண்டோ!
குருவிகளின் கூட்டம் தன்னை...

மயக்க வரும் மாலையிலே
நீல வான ஓடையிலே
நீந்தி வரும் வெண்ணழகை

கண்டதுண்டோ!
கரும் புகையின்
திரையின்றி...

நின்றதுண்டோ
நெடும் மணற்பரப்பில்
நெத்திலியின் வாசமின்றி...

நிறைந்ததுண்டோ நெஞ்சம்
நீழ் கடலின்
நிசப்தத்தில்...
அலைக்கடலின்
ஆரவாரதில்...

பார்த்ததுண்டோ!
பட்டணத்தில்
படு சுத்தமாய்
ஓர் இடம்...

No comments: