Showing posts with label கலிமண்டிலம். Show all posts
Showing posts with label கலிமண்டிலம். Show all posts

Monday, May 31, 2010

கலிமண்டிலம்

தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா +
புளிமாங்காய் + தேமா + புளிமா

வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க
சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
திறனோடு வேண்டும் சுடுசொல்
இல்லாத பேச்சு இணையான கூட்டு
நலியாத நல்ல இலக்கும்
பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
புறம்போகச் செய்யும் துணிவும்
குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம்.



சொல்லில் நல்லறம் சூழ தீயதைக்
கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழிச்
செல்ல வாழ்விலே சிறப்பும் செல்வமும்
நல்ல யாவையும் நாடி ஏய்துமே!
மா புளிமா புளிமா புளிமா


அஞ்சா மனமும் அயரா துழைப்பும்
வஞ்சம் இல்லா வளனோ(டு) அலையா
நெஞ்சில் நிலையாய் நிறைவும் தருவாய்
மஞ்சே சிவனார் மனதாள் உமையே!

Wednesday, May 26, 2010

நன்றே நாடுக!


நன்று செய்திட நாடிடு நம்முயிர்
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.

Thursday, May 20, 2010

ஈகை

குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்



தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.