Thursday, February 26, 2009

வெண்பா வரைந்தேன் விரைந்து

தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
வெண்பா வரைந்தேன் விரைந்து.

3 comments:

சொல்லரசன் said...

ஒ இது அகரம் அமுதா பாதிப்போ!

உங்கள் வென்பா முயற்சி தொடர வாழ்த்துகள்

உமா said...

ஆமாம். அவர் வகுப்பில் சேர்ந்து சில நாட்களாயிற்று. தேர்வு எழுதியாகிவிட்டது. ஆசிரியர்தான் திருத்தவில்லை.

தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

மிக்க நன்றி.

அகரம் அமுதா said...

சொல்லரசன் அவர்களே! தாங்கள் யார் என்பதையே கண்டு பிடிக்க முடியவில்லையே! தங்களைப் பற்றி அறியத் தாருங்களேன். வெண்பா வகுப்பிலும் கலந்துகொள்ளலாமே!

உமா அக்கா! உங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள். ஆசிரியர் சோம்பேறி என்பதால் சிறிது காலதாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.