Tuesday, March 17, 2009

கோடை விடுமுறை

மாமா வீட்டில்
மாம்பழத்திற்கும் சண்டை
மஞ்சள் பலூனுக்கும் சண்டை..
பொம்மையோ புத்தகமோ
பொழுதுக்கும் ஆரவாரம்..
ஒரு மாதமாய்
கவலையில் அம்மாக்கள்....
கழிந்ததும்
ஒன்பது மாதமாய்
கவலையில் குழந்தைகள்..
அடுத்த கோடைக்காக ஏங்கி....

7 comments:

சொல்லரசன் said...

வந்தாச்சு கோடைகாலம்.

ஆ.ஞானசேகரன் said...

அது அந்த காலம் உமா... இப்பெல்லாம் மாமா வீட்டில் மாதகணக்கில் இருக்க முடிவதில்லை.. எல்லாம் நவினத்துவம்.... அதல்லாம் நம்ம காலத்திலே போய்விட்டது என்றுதான் நினைக்கின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

உமா மேடம்,.. உங்கள் பிளாக்கில் setting சென்று Word Verification னை எடுத்துவிடுங்கள்.. கருத்து சொல்ல சிறமமாக உள்ளது..

உமா said...

நன்றி திரு ஞானசேகரன்.word verification ஐ எடுத்துவிட்டேன்.இப்போது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரிதான்.பாட்டி வீடு,அத்தை வீடு என இப்போது போகமுடிவதில்லை. கோடையில் விடுமுறையே இப்போது இல்லையே ஏதாவது கோச்சிங்' கிளாஸ் அனுப்பிவிடுகிறோம். என்றாலும் நாங்கள் எனது சகோதரன் அல்லது சகோதரி வீட்டில் ஒரு வாரமாவது தங்கிவருவோம்.அலுவலகம் வீடு எல்லாம் மறந்து அந்த நாட்கள் தான் எங்களை புதுபிக்கும்.

உமா said...

சொல்லரசன் உடனடி பின்னூட்டத்திற்கு நன்றி.

அகரம் அமுதா said...

அட! ஒரு மணித்துளி இளமை காலத்iதைக் கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

மேலும் உமா அவர்களே! தங்களுக்கு பிரவாகம் என்றோர் குழுமம் இயங்கிக் கொண்டிருப்பது தெரியுமா? அதில் இரு மூன்று நாட்களாக இலக்கணப் பாடம் புதிதாகத் துவங்கியிருக்கிறேன். தங்களை அக்குழுமத்தில் உறுப்பினராகி இலக்கணப் பாட வகுப்பில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். நன்றி

பாவும், பாவிலக்கணமும்! -அகரம்.அமுதா - 12 new
http://groups.google.com/group/Piravakam/t/28ecfe7ddf4437ed?hl=ta

உமா said...

அமுதா அவர்களே, என் மகிழ்ச்சியை சொல்லில் அடக்கமுடியாது.அற்புதம்,கோடி நன்றிகள். தமிழ் கடலிலே நானும் கொஞ்சம் மூழ்க போகிறேன் என நினைக்கவே பெரு மகிழ்ச்சியாய் உள்ளது. குழுமத்தில் இணைந்துவிட்டேன்.ஆனால் குழுமம் என்பது எனக்கு புதிது.கேள்வி கேட்டு பதில் பெருவதில் கொஞ்சம் குழப்பமாக உள்ளது. பாடம் 2 என்னால் போகமுடியவில்லை. என் பின்னூட்டம் பதிவாகவில்லை. கற்றுக்கொண்டுவிடுகிறேன்.நன்றி.