
சகோதரா சொல்!ஏன் வறுமை விரட்ட
அகோர பசியால்நீ ஆவிபுசித் தாயோ?
நிலமோ நடுங்கியேக்கொல் லுந்தயங் காமல்
பலருயிர் போக்கினையே ஏன்?
மதமா மயக்கிய துன்னை? களிறே
மதமா பிடித்த துனை;நல் இளந்தளிருன்
பிஞ்சு மனதைக் கெடுத்து உனையேக்கொல்
நஞ்சாய் நசுக்கிய தார்?
வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
வாழ்வழிக்க வந்தாயே! வீழ்ந்தோரின் வாழ்வினுக்கு
தக்கபதில் சொல்லிடவே சண்டாளா! சாவுனக்கு
இக்கண மேவரட்டும் சா.
சற்றே மாற்றியப் பின்.
வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
வாழ்வழிக்க வந்தாய் வெறிச்செயலால் வீழ்ந்தோரின்
வாழ்நாள் விலையாயுன் வாழ்விழந்து நின்றுநிலைத்
தாழ்ந்தாய் தகாதனச் செய்து.
1 comment:
வித்தியாசமான பார்வை.. நல்லாயிருக்கு..
இதே படத்திற்கு என் இடுகை ஒன்று
இனிய இயந்திரா! நேற்று மும்பையில்..
Post a Comment