Tuesday, September 01, 2009

ஆசிரியப்பா

நாளை செய்வோம் நல்லது என்றே
நாளைக் கடத்திடல் நன்றோ! காலம்
வருமுன் காலன் வரலாம்
தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே.

[நாளைக்குச் செய்துக்கொள்ளலாம் என எந்த ஒரு நற்செயலையும் தள்ளிப்போடக்கூடாது. நம் வாழ்க்கை நிலையானதில்லை. எனவே நற்காரியங்களை உடனே செய்துவிடவேண்டும். இல்லையென்றால் செய்யமுடியாமலே போய்விடலாம்.]

6 comments:

நட்புடன் ஜமால் said...

ஒன்றே செய்,
ஒன்றும் நன்றே செய்,
அதுவும் இன்றே செய்

------------


நல்லாயிருக்கு-பா

தமிழ் said...

அருமை

ஆ.ஞானசேகரன் said...

பழசு என்றாலும் புதிய கோணம் நல்ல பார்வை

அ. நம்பி said...

//தருவீர் அணைத்தும் தயங்காது இன்றே.//

`அணைத்தும்' - எழுத்துப் பிழை.

`அனைத்தும்' என்று திருத்துங்கள்.

பாடல் நன்று.

தேவன் மாயம் said...

உமா! என் வாழ்த்துக்கள்!!

உமா said...

நன்றி திரு ஜமால்.

நன்றி திரு. திகழ்
நன்றிதிரு.ஞானசேகரன்
நன்றி திரு. அ. நம்பி. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. பிழை திருத்திவிட்டேன்.

நன்றி திரு தேவன் மாயம்.