Tuesday, September 01, 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே
வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே
மண்ணின் வசந்த வெடிப்பு.
[இயைபு தொடையில்]

[நம்முன் மெதுவாக தோன்றும் கருமை, கரியப் பட்டு விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு.

6 comments:

Vidhoosh said...

அருமைங்க உமா. நான் நீங்கதான்னு நினைச்சுக் கிட்டு வேற உமா கிட்ட இவ்வளவு நாள் பேசிக்கிட்டு இருந்திருக்கேன்... இன்று தான் தெரியும் அது நீங்கள் இல்லைன்னு :))

ஐயோ ஐயோ..

-வித்யா

தேவன் மாயம் said...

மரபுக் கவிதையில் ஜாலம் செய்கிறீர்கள்!!!

உமா said...

//அருமைங்க உமா. நான் நீங்கதான்னு நினைச்சுக் கிட்டு வேற உமா கிட்ட இவ்வளவு நாள் பேசிக்கிட்டு இருந்திருக்கேன்... இன்று தான் தெரியும் அது நீங்கள் இல்லைன்னு :))

ஐயோ ஐயோ..

-வித்யா//

ஹ ஹ்ஹா இருக்கட்டுமே இன்னுமொரு நண்பி. அவருக்கும் என் வணக்கங்கள்.

வாழ்த்துக்கு நன்றி.

உமா said...

நன்றி டாக்டர் தேவகுமார் அவர்களே.

ஆ.ஞானசேகரன் said...

//அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு. //

அழகான வெண்பா...

க.பாலாசி said...

//விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு. //

நன்று விளக்கத்துடன் கூடிய உங்களின் வெண்பா கவிதை...

தொடருங்கள்...