Monday, September 14, 2009

கந்தனே அருள்வான். - [ நிலைமண்டில ஆசிரியப்பா]



அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனை
பழகிடும் தமிழின் பற்பல சொற்களாய்
விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே
கலக்கம் நீக்கிக் கருத்தினைச் சேர்த்தே
சிந்தனை தமிழாய் செயல்களும் தமிழ்க்காய்
எந்தமிழ்க் கந்தனை என்றும்நாம் வணங்கிடத்
தந்தருள் புரிவான் தங்கிடும் புகழும்
செந்தமிழ் தன்னுடன் சிறப்புற நமக்கே!

No comments: