Friday, September 25, 2009

விழி திறந்து காட்டுவழி - இணைக்குறள் ஆசிரியப்பா


இப்படம் திரு.தீபச்செல்வன் அவர்களின் http://deebam.blogspot.com/ வலையிலிருந்து எடுத்தாளப்பட்டது. இப் பா அவரது முகத்தை மூடிக் கொள்கிற குழந்தை என்ற கவிதைக்கு பின்னூட்டமாக எழுதபட்டது. இப் படம் எடுக்கப்பட்டச் சூழல் அவர் வரிகளிலேயே!!! (விடுதலைப் புலிகளது கட்டாய ஆட்சேட்பிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காகத் திருமணம் செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு/தம்பதிகளுக்குப் பிறந்த இந்தக் குழந்தை 20.09.2009 அன்று கைதடி தடுப்பு முகாமிலிருந்து விடுவிப்பதற்கு சற்று முன்னதாகக் காத்துக்கொண்டிருந்தப் பொழுது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டது.)

கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமிம்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ? நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக் காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!

6 comments:

அகரம் அமுதா said...

அருமை. அருமை. வாழ்த்துக்கள்.


/////ஈழத் தமிழர்இழிநிலை மாறவிலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!/////

அழகிய வரிகள். வாழ்க.

அன்புடன் மலிக்கா said...

அருமையான ஆழமான வரிகள்

தமிழநம்பி said...

உணர்வு மிக்க நல்ல பா.

உமா said...

மிக்க நன்றி திரு.அமுதா
மிக்க நன்றி மலிக்கா

உமா said...

மிக்க நன்றி திரு.தமிழநம்பி அய்யா.

அன்புடன் நான் said...

முழுமையாக விரும்பி படித்தேன். அருமை தோழி வாழ்த்துக்கள்.