Wednesday, May 05, 2010

கந்தா கடைந்தேற வழிகாட்டு

[குறிலீற்று மா கூவிளம் விளம் மா
குறிலீற்று மா கூவிளம் விளம் மா]

காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில்
கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம்
வாட்டும் இப்புவி வாழ்வினில் உழன்று
வாடி நின்றிடும் எளியனுக் குவழி
காட்டு, செங்கதிர் இருளினை விலக்க
காட்சி யாகிடும் உன்னருள் ஜோதி
ஆட்சி செய்திடும் மனவிருள் நீக்கு
ஆண்டி யாய்மலை மீதருள் முருகா!

5 comments:

தேவன் மாயம் said...

உடல் நலம் பெற வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

மனவிருள் நீக்கும் கவிதை அருமை!

உமா said...

மிக்க நன்றி டாக்டர்.தேவன் மாயம்.

கமலேஷ் said...

மிக அழகான கவிதை...வாழ்த்துக்கள்...

உமா said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ்.