Monday, March 19, 2012

வாழ்த்து


மங்களம் பொங்கும் மாசறு திங்கள்
'பங்குனி' 'கர'வாண்(டு) ஐந்தாம் நாளில்
எங்கள் செல்வி 'நித்யா', எழிலாள்,
பத்தரை மாற்று பசும்பொன் அணையாள்
இத்தரை மீதில் இல்லறம் இனிக்க
இணைந்தார் 'சந்திர சேகரன்' இனிய
மனத்தார், சிரித்த முகத்தார் வாழ்வில்
அணைத்தும் பெற்றே அன்புடன் சிறக்க
இணைவோம் வாழ்த்த வாழ்க வாழ்கவே!
சூழ்க நல்லவர் சுற்றமும் நட்பும்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே!

 

2 comments:

Yaathoramani.blogspot.com said...

தம்பதிகள் அனைத்து வளமும் நலமும் பெற்று
நீடூழி வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கவிதை மிக மிக அருமை

Marc said...

மனமார்ந்த வாழ்த்துகள்.