Sunday, October 21, 2012

விடியல்

இருட் கள்வன்
ஒளித்ததையெல்லாம்
பகற் போலிஸ்
பட்டியலிட்டது...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட...!

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
பகலுக்கு உங்கள் புதிய விளக்கம் அருமை
தொடர் வாழ்த்துக்கள்

agaramamuthan said...

வாழ்க தோழி!

பொதுவாக ஒன்றைக் கண்டுபிடித்தால் வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்பார்கள். ஆனால் வானில் விண்மீன்களையும் நிலவையும் இரவு இருட்டுப்போட்டுக் காட்டுகிறது. ஆனால் விடியல் வெளிச்சம்போட்டு மறைத்துவிடுகிறதே. பிறகெப்படி பகலே போலிஸ் என்கிறீர்கள்?

ஓகோ! திருடனிடமிருந்து பொருட்களைக் கைப்பற்றி பொருட்களை இழந்தவனிடம் ஒப்படைக்காமல் போலிஸே மறைத்துவிடுகிறதே அதைத்தான் நாசுக்காகத் தெரிவிக்கிறீர்களோ?

agaramamuthan said...

வாழ்க தோழி!

பொதுவாக ஒன்றைக் கண்டுபிடித்தால் வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்பார்கள். ஆனால் வானில் விண்மீன்களையும் நிலவையும் இரவு இருட்டுப்போட்டுக் காட்டுகிறது. ஆனால் விடியல் வெளிச்சம்போட்டு மறைத்துவிடுகிறதே. பிறகெப்படி பகலே போலிஸ் என்கிறீர்கள்?

ஓகோ! திருடனிடமிருந்து பொருட்களைக் கைப்பற்றி பொருட்களை இழந்தவனிடம் ஒப்படைக்காமல் போலிஸே மறைத்துவிடுகிறதே அதைத்தான் நாசுக்காகத் தெரிவிக்கிறீர்களோ?

உமா said...

விண்மீங்களையும் நிலவையும் ஆபரணமாக அணிந்து அழகாக வந்த இருள் பூமியின் அழகிய அணிகளாகிய மலைகள் செடி, கொடிகள் மரங்கள் ஆகியவற்றை ஒளித்து வைக்கிறாள். பகற் போலீஸ் அவற்றையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவ்வப்போது திருடர்களிடமிருந்து மீட்கும் பொருட்களை செய்தியாளருக்கு பார்வைக்கு வைத்து உரியவரிடம் போலீஸ் ஒப்படைப்பதில்லையா? அது போல்.