Tuesday, May 12, 2015

அம்மா



நினைவுக் கரங்களால் மட்டுமே
தீண்ட முடிந்த
நேற்றையப் பொழுதுகளின்
நிஜங்களிலும்...

மூடிய கண்களால் மட்டுமே
காண முடிந்த
கனவுத் திரைகளின்
நிழல்களிலும்...

உப்பின் சுவையிலும்
உணர்வின்
நீர்த் துளியிலும்...

வலியிலும்
வலி மறந்த
இதங்களிலும்...

ஆரவாரங்களினூடேயான
என் ஆத்ம
தனிமைகளிலும்...

எப்போதும்
உயிர்த்திருக்கிறாள்
என்
அம்மா...

3 comments:

சுப்பிரமணி சேகர் said...

அருமை

அருள்மொழிவர்மன் said...

அருமையான படைப்பு. நின் கவிப்பணி தொடர வாழ்த்துக்கள்!

~நேற்றயப் பொழுது~ நேற்றைய என்பது சரியோ?

~வலி மறந்த
இதங்களிலும்~ இது `இதயத்தை` குறிப்பிட முனைந்ததோ?

கருத்து தவறானால் ஒதுக்குக. நற்கவியில் பிழையிருப்பது ருசியைக் குறைக்கும்.

அருள்மொழிவர்மன் said...

அருமையான படைப்பு. நின் கவிப்பணி தொடர வாழ்த்துக்கள்!

~நேற்றயப் பொழுது~ நேற்றைய என்பது சரியோ?

~வலி மறந்த
இதங்களிலும்~ இது `இதயத்தை` குறிப்பிட முனைந்ததோ?

கருத்து தவறானால் ஒதுக்குக. நற்கவியில் பிழையிருப்பது ருசியைக் குறைக்கும்.