சிதறிய எண்ணங்களை
சீராக்கி சேர்க்கிறது...
செயற்கரிய செய்கைக்கு
'சிந்தனை' உரமாகிறது...
நல்லவர்கள் சிந்தித்தால்
சிந்தனைகள் சந்தித்தால்...
நானிலத்தே நன்மைகள்
நமக்கெல்லாம் விளைகிறது...
மாறாக சிந்திப்போர்
மனத்தாலும் சந்தித்தால்....
தீராத துன்பங்கள்
தீயாக சுடுகிறது....
சொல்லோடு சிந்தனை
மொழிவழி சந்தித்தால்...
பொருளோடு பொருந்தியது
நற்கவிதை ஆகிறது...
சிறப்பான சிந்தனை
செயலோடு சந்தித்தால்...
மறுக்காமல் வெற்றிகள்
முன்வந்து நிற்கிறது...
மறக்காதே! சிந்தனையே
மனிதருக்கு வரமாகும்...
தவறாதே உள்ளத்தில்
சிந்தனையைச் தெளிவாக்கு....
No comments:
Post a Comment