சிந்தனை தோட்டத்தில்
மலர்வது
யோசனை பூக்கள்...
வாசனைப் பூக்களில்...
வண்ணங்கள்
மயக்கும்...
யோசனை பூக்களின்
எண்ணங்கள்
மயக்கும்...
எண்ணங்கள்
விதையாக
எழுத்துக்கள்
மலரும் போது...
படைப்புச் சோலையில்
கவிதைகள்
பூத்துக் குலுங்கும்...
சங்கீதச் சோலையில்
ஸவரங்கள்
சேரும் போது
கற்பனை நீராலே
கீதங்கள்
மலரும்
மெட்டாக...
சிந்தனை சோலையில்
செயல்கள் உரமாக
பூத்துக் குலுங்கட்டும்
பயன்கள்
பொதுவாக...
அனைவருக்கும் பொதுவாக...
2 comments:
///வாசனைப் பூக்களில்...
வண்ணங்கள்
மயக்கும்...
யோசனை பூக்களின்
எண்ணங்கள்
மயக்கும்... ////
Nice line
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Post a Comment