வெளிச்சம் தந்தே
என்னை இயக்கும் சூரியனே! உன்
ஒற்றைக் கதிரால்
உயிரைத் தொட்டு
உவகைத் தந்திட வா!யெதிரே!
ஏழை இவளின்
இதயம் தைக்க
ஏன்நீ விழைந்தாய் இன்னுயிரே! என்
எண்ணம் மனத்தில்
இனியும் வேண்டாம்
எனறே மறைந்து நின்றனையோ!
கண்ணில் மறைந்தால்
கதியென் னாகும்
கருணைக் காட்டு கதிரவனே! உன்
காலச் சுழற்சியில்
காண்பவர் ஆயிரம்
கடுப்போ என்தன் எதிர்வரவே!
விருப்பு வெறுப்பு
எதுவும் இன்றி
ஒன்றாய் காண்பது உன்னியல்பு! இன்று
நெருப்பாய் என்தன்
நினைவைத் தள்ளி
வதைப்பது சரியோ! நீயியம்பு...
எனது வானில்
வெளிச்சம் தந்தே
என்னை இயக்கும் சூரியனே! உன்
ஒற்றைக் கதிரால்
உயிரைத் தொட்டு
உவகைத் தந்திட வா!யெதிரே!
No comments:
Post a Comment